Saturday, February 26, 2022

இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும்

இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும் தெரிவது ஒரு கொடிய விஷ பாம்பு மீனை கொன்று தின்கிறது என்பதே. ஆனால் ஒருவருக்கு மட்டும் இது வேறு மாதிரி தெரிகிறது. அவர் கூறுகிறார், “இது கொலைதான். ஆனால் கொலை என்று நிரூபிக்க சாட்சி இல்லாதபடியால் இதனை கொலை என்று கூறமுடியாது.” “இந்த மீன் ஒரு குஞ்சு மீனை தின்றுள்ளது. எனவே இனச்சுத்திகரிப்பு செய்தமைக்காக இந்த மீன் விசாரிக்கப்படல் வேண்டும்.” “இந்த கொடிய பாம்புடன் சிறுவயது முதல் வாழ்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.” “ நான் சட்டம் படித்துள்ளேன். அதனால் எனக்கு இவை எல்லாம் தெரிகிறது” இவ்வாறு கூறுபவரை பொதுவாக “கூமுட்டை” என்று மக்கள் அழைப்பார்கள். ஆனால் அவருடைய தம்பிகள் “சேர்” என்று அழைக்கின்றனர். "மீன் நீரில் தத்தளித்தது. எனவே பாம்பு அந்த மீனை பாதுகாத்துள்ளது" என்று மகிந்த ராஜபக்சா கும்பல் கூறுவது இன்னொரு கதை.

No comments:

Post a Comment