Saturday, February 26, 2022

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர் . அத்துடன் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனாலும் சிங்களவர்தான் வந்தேறிகள் என்று தன்னால் நிரூபிக்க முடியுமென சவால் விட்டவர். தமிழரை வந்தேறிகள் என்று கூறிய பௌத்த பிக்குவிற்கே இந்த சவாலை இவர் விட்டார். இவர் இந்த சவாலை இந்தியாவில் இருந்தோ அல்லது வேறு வெளிநாடுகளில் இருந்தோ விடவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துகொண்டே விட்டுள்ளார். இவரை தாக்குவதற்கு சிங்கள பேரினவாதிகள் பல முறை முயற்சி செய்தனர். ஆனாலும் உயிராபத்திற்கு மத்தியிலும் இவர் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஆதரவு வழங்கியவர். இலங்கை பௌத்தநாடு என்பதை தமிழர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூறி சம்பந்தர் ஐயா சிங்கக்கொடியை தூக்கி ஆட்டியபோது சிங்களவரை வந்தேறிகள் என்று துணிச்சலாக இவர் கூறினார்.

No comments:

Post a Comment