Saturday, February 26, 2022

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள் இரண்டும் தமிழர் வாழும் வடபகுதியில் நடந்துள்ளன. இரண்டிலும் தமிழர்களே பங்குபற்றியுள்ளனர். ஒன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி நடத்திய நிகழ்வு மற்றொன்று, கோத்தபாயாவுக்காக நடாத்தப்பட்ட சுதந்திரதினக் கொண்டாட்டம். தமிழ் மக்கள் சுதந்திரதினம் கொண்டாடினார்கள் என்றால் கோத்தபாயாவே நம்பமாட்டார். அப்படியிருக்க இந்த கூத்தை உலகம் நம்பிவிடுமா? ராணுவ புலனாய்வை நம்பி சிங்கக்கொடி பிடித்து சென்ற அந்த நாலு தமிழருக்கும் ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு வேலை தருவதாகவோ அல்லது காணி தருவதாகவோ கூறி கூட்டிச் சென்றிருக்கலாம். ஆனால் தன்னை சிங்கள பௌத்தன் என்று கூறும் கோத்தாவுக்கு எதிராக அதே சிங்கள பௌத்த மாணவர்கள் கொழும்பில் கோத்தாவின் கொடும்பாவி எரித்து போராட்டம் செய்துள்ளனர். தனக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கே ஏதும் செய்யாத கோத்தா உங்களுக்கு ஏதும் தருவாரா? கொஞ்சம் யோசியுங்கள்.

No comments:

Post a Comment