Saturday, February 26, 2022

பொலிஸ் பஸ்தியாம்பிள்ளை தனத

பொலிஸ் பஸ்தியாம்பிள்ளை தனது குழுவினரோடு உமாமகேஸ்வரனையும் பிரபாகரனையும் கைது செய்வதற்காக முருங்கனில் இருந்த புலிகளின் பண்ணைக்குச் சென்றார். அவர் தேடிச்சென்ற முக்கிய போராளிகள் அங்கு இல்லை என்பதால் ஏமாற்றம் அடைந்த பஸ்தியாம்பிள்ளை அங்கிருந்த போராளிகளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். அவ்வேளை பஸ்தியாம்பிள்ளை கையில் இருந்த சப் மிசின்கன்(SMG ) துப்பாக்கியை பார்த்த ரவி (மாமா) என்ற போராளி “சேர் இந்த ஓட்டைகள் எல்லாவற்றுக்கும் ஊடாக குண்டுகள் வருமா?” என்று அப்பாவியாய் கேட்டார். பஸ்தியாம்பிள்ளையும் இவர்கள் போராளிகள் என்பது தெரியாமல் அதை இயக்குவது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதன்பின்பு ரவியும் அம்மானும் அதைப் பறித்தெடுத்து அந்த SMG யாலே பஸ்தியாம்பிள்ளை சுட்டுக் கொன்றார்கள். இப்படித்தான் போராளிகளின் கைகளுக்கு SMG துப்பாக்கி வந்தது. இங்கு வேடிக்கை என்னவெனில் இப்பவும் கனடாவில் இருக்கும் சுப்பிரமணியசுவாமி SMGயை ஓட்டைத்துப்பாக்கி என்று கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் இயக்கத்தில் இருக்கவில்லை. எல்லோரும் போராட இயக்கம் சென்றபோது இவர் சுமந்திரன் போல் டில்லி சென்று படித்தவர். உளவுப்படையில் இருக்கும் தனது உறவினர் கூறியதென்று நிறைய பொய் கதைகளை சுமந்திரன் தம்பிகளுடன் சேர்ந்து கூறிவருகிறார். தோழர் தமிழரசன் கையில் இருந்த துப்பாக்கியை வெடிக்காத ஓட்டைத் துப்பாக்கி என்கிறார். தமிரசனுக்கு வெடி மருந்து துப்பாக்கி எல்லாம் EPRLF இயக்கம் கொடுத்ததாம். தோழர் தமிழரசன் குழுவினரிடம் இரண்டு SMG, இரண்டு றிவோல்வர் , ஒரு பிஸ்டல் துப்பாக்கிகள் இருந்தன. அதைவிட ஒறிஜினல் கிரினைட் குண்டுகள் இருந்தன. ஒரு ஏ.கே.47 இருந்தது. மறைத்து கொண்டு செல்வது சிரமம் என்பதால் அதை கொண்டு செல்லவில்லை. பொன்பரப்பியில் தோழர் தமிழரசன் தான் சுடாதது மட்டுமன்றி தனது தோழர்களையும் தடுத்தார் என்பதே உண்மை. இந்த பொன்பரப்பி சம்பவத்திற்கு முன் தோழர் தமிழரசன் உட்கோட்டையில் அமைந்த வங்கியை கொள்ளையிட முயன்றார். அப்போது இதேபோல் நிலை வந்தபோது இதே துப்பாக்கியால் சுட்டும் வெடி குண்டை வெடிக்க வைத்தும் தப்பிச் சென்றார். அதுபோல் பொன்பரப்பியிலும் அவர் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் மக்கள் என்ற போர்வையில் பொலிஸ் சுற்றிவழைத்து அவரைக் கொன்றது. இந்த உண்மைகளை உணராமல் வேண்டுமென்றே தோழர் தமிழரசன் மீது அவதூறு செய்கின்றனர் சுமந்திரன் தம்பிகள். உளவுப்படைகளின் உதவியுடன் சுமந்திரன் தம்பிகள் செய்யும் அவதூறுகள் தமிழ்தேசிய வளர்ச்சியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

No comments:

Post a Comment