Saturday, February 26, 2022

13 வது நினைவஞ்சலிகள்!

•13 வது நினைவஞ்சலிகள்! முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 13வது நினைவு நாள் இன்று. தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி திமுக அரசும், அதன் அடிவருடி ஏவல்துறையும் சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது. ஆயினும், உண்மை ஈகத்தை எந்த கயவர்களாலும் மறைக்கமுடியாது என்பதை உணர்த்தும் வகையில் பள்ளப்பட்டி ரவியின் இறுதி ஊர்வலத்தில் அணிஅணியாய் தமிழர்கள் திரண்டனர். தமிழினத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் மரணம் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தையும் இனங்காட்டியுள்ளது. அவரை நன்றியுடன் என்றும் நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment