Saturday, February 26, 2022

மறக்க முடியாத மோதூ வைரவர்

•மறக்க முடியாத மோதூ வைரவர் கரவெட்டியில் உள்ள பலர் இந்த வைரவர் கோவிலை அறிந்திருப்பார்கள். ஆனால் மிகவும் சிலரே நேரில் சென்று பார்த்திருப்பார்கள். கரவெட்டியில் உள்ள சோனப்புவெளியில் ஆற்றை கடந்து செல்லும்போது பனைக்கூடலில் இந்த கோவில் அமைந்திருக்கிறது. மாட்டுக்கள்ளன் பாக்கியராசா இந்த வைரவர் கோவிலில் மறைந்திருந்தார் என்று அப்போது ஊரில் பேசினார்கள். பகலில்கூட இந்த இடத்திற்கு செல்ல பலரும் அஞ்சியவேளையில் சிங்கள ஆர்மிக்கு பயந்து நாம் இரவில் இந்த கோவிலில் தங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல 1984ல் இந்த வைரவர் கோவில் சுவரில் துப்பாக்கியால் சுட்டு பயற்சியும் எடுத்திருக்கிறோம். அந்த அடையாளம் இப்போதும் அதன் சுவரில் இருப்பதையே கீழே உள்ள படம் காட்டுகிறது. இவ்வாறு எமது போராட்டத்துடன் இரண்டறக் கலந்துள்ள இந்த கோவில் இப்போது சிதைவடைந்துவிட்டது என்பதை அறியும்போது மனவருத்தமாக இருக்கிறது.

No comments:

Post a Comment