Saturday, February 26, 2022

இவர்,

இவர், ஈழத் தமிழர்களை முழுமையாக ஆதரிப்பதாக கூறுகிறார். ஒரு ஈழத் தமிழனையே தன் தலைவர் என்கிறார். இனி ஈழத் தமிழனை யாராவது அடித்தால் திருப்பி அடிப்பேன் என்கிறார் இன்று தமிழகத்தில் இருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக எழும் முதல் குரலாக இவர் குரல் இருக்கிறது தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாக மாறி தமிழரை காப்பேன் என ஒரு தலைவர் கூறினார். ஆனால் அந்த கட்டு மரத் தலைவர் காப்பாற்ற வரவில்லை. தத்தளிக்கும் ஈழத் தமிழருக்கு சிறு குச்சியாக இன்று இவர் இருக்கிறார். இவரை தற்போது சுமந்திரன் தமபிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர். மன்னிக்கவும் விமர்சிக்கவில்லை, அவதூறு செய்கின்றனர். இவரை ஆரியமும் திராவிடமும் எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சுமந்திரன் தம்பிகள் ஏன் எதிர்க்கின்றனர்? உண்மையில் சுமந்திரன் தம்பிகள்; எதிர்ப்பது இவரை அல்ல. சுமந்திரன் தம்பிகள் எதிர்ப்பது தமிழ்த்தேசியத்தை. பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்தேசியம் நகருவது இலங்கை இந்திய அரசுகளுக்கு மட்டுமல்ல சுமந்திரன் தம்பிகளுக்கும் அச்சத்தைக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment