Saturday, February 26, 2022

இதுவரை எல்லை தாண்டி வந்தவர்கள்

இதுவரை எல்லை தாண்டி வந்தவர்கள் ஈழ தமிழ் மீனவர்களின் வலைகளை அறுத்தார்கள். படகுகளை சேதப்படுத்தினார்கள். ஆனால் இம்முறை இரு ஈழத் தமிழ் மீனவர்களின் கழுத்து அறுத்து கொலை செய்திருக்கிறார்கள். ரோலர் படகில் வருபவர்களே இவ்வாறு எல்லைதாண்டி வந்து செய்கின்றனர். புலிகளுக்கு பெற்றோல் வருவதைத் தடுத்த இலங்கை இந்திய கடற்படைகளால் எல்லை தாண்டி வரும் ரோலர் படகுகளை ஏன் தடுக்க முடியவில்லை? கேரளாவில் இருந்துவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை ஏன் இவர்களால் தடுக்க முடியவில்லை? ஈழ இந்திய மீனவர்கள் நேரடியாக பேசுவதன் மூலமே இவ் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஈழ தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்க்க விரும்புகின்றனர். ஆனால் ரோலர் படகு முதலாளிகள் இந்திய அரசு மூலம் இப் பேச்சுவார்த்தை நடக்க விடாமல் தடுக்கின்றனர். உதாரணமாக திமுக தலைவர் டி.அர் பாலுவுக்கு 1200 ரோலர் படகுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல அவருக்கு இலங்கை கொழும்பில்கூட வியாபார முதலீடுகள் இருக்கின்றன இவ் முதலாளிகள் தமது நலனுக்காகவும் இலங்கை இந்திய அரசின் விருப்பத்திற்காகவும் ஈழ தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்க சதி செய்கின்றனர்.

No comments:

Post a Comment