Saturday, February 26, 2022

ஈழத் தமிழரும் தமிழக தமிழரும்

ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் ஒன்றுபட வேண்டும் என்று ஸ்டாலினும் சுமந்திரனும் ZOOM மீட்டிங் வைத்து கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசியல் பற்றி ஈழத் தமிழர் பேசக்கூடாது என்று 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் கிளப்கவுசில் கூறுகின்றனர். 200 ரூபா திமுக உடன்பிறப்புகளும் சுமந்திரன் தம்பிகளும் சந்திக்கும் புள்ளி இது. மஞ்சள் பையுடன் திருட்டு ரயிலில் வந்த வந்த கலைஞர் குடும்பத்திற்கு 45000 கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்காத சுமந்திரன் தம்பி மூப்பனார் வீட்டு கல்யாணத்தில் நடனமாடிய நடிகை ஜெயா அம்மையாருக்கு 30000 கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்காத சுமந்திரன் தம்பி சீமான் கூறும் இட்லிக்குள் இறைச்சிக்கறி எப்படி வந்தது என்று கிளப்கவசில் கேட்கிறார். பரவாயில்லை வாய் இருக்கு என்று கேட்கிறார். கேட்கட்டும். ஆனால் எந்நேரமும் சீமானை விமர்சிக்கும் இந்த சுமந்திரன தம்பிகள், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலை பற்றியோ, 39 வருடமாக இருக்கும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது பற்றியோ, அகதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பாவது வழங்க வேண்டும் என்பது பற்றியோ, ஏன் ஒருபோதும் பேசுவதில்லை? ஆனால் இவை பற்றியெல்லாம் சீமான் பேசுகிறார்.

No comments:

Post a Comment