Saturday, February 26, 2022

இதுவரை சீமான் மீது அவதூறு

இதுவரை சீமான் மீது அவதூறு செய்து வந்த சுமந்திரன் தம்பிகள் இன்று தோழர் தமிழரசன் மீதும் அவதூறு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோழர் தமிழரசன் பாலத்திற்கு குண்டு வைத்தவராம் கொலை காரனாம். கொள்ளைக்காரனாம். இதெல்லாம் தமிழக காவல்துறையும் கியூ பிரிவு உளவுதுறையும் காலம் காலமாக செய்து வந்த அவதூறுகள்தான். ஆனால் அதையே சுமந்திரன் தம்பிகளும் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தோழர் தமிழரசன் பாலத்திற்கு குண்டு வைத்ததே ஈழத் தமிழருக்காகத்தான் . தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியே அவர் பாலத்திற்கு குண்டு வைத்தார். அன்று அவர் கோரியபடி தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வைத்திருந்தால் இன்று தீர்வு 13 ஐக் கேட்டு கடிதம் எழுதும் அவலம் வந்திருக்காது. தமிழ்த்தேசியம் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் மட்டுமல்ல சுமந்திரன் தம்பிகளுக்கும் அச்சத்தைக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment