Saturday, February 26, 2022

கடந்த நான்கு வருடங்களாக

கடந்த நான்கு வருடங்களாக காணாமல் போனவர்களின் உறவுகள் வீதியில் உட்கார்ந்து காந்திய வழியில் போராடுகின்றனர். அதை இந்த காந்தி தேச தூதுவர் கண்டுகொள்ளவேயில்லை. அதேவேளை இந்த காந்தி தேசத்தின் தூதுவர் யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை நிறுவி நினைவு கூர்கிறார். இங்கு காந்தி சிலை என்பது காந்தீயத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பின் குறியீடு. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரி ஒருவர் ஒரு பியர் போத்தலுக்காக நாட்டு ரகசியங்களை பாக்கிஸ்தான் அதிகாரிக்கு வழங்கியதாக வந்த செய்தியை படித்து கேவலம் ஒரு போத்தல் பியருக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கிறாரே என சிரித்தேன். ஆனால் இப்போது நமது தலைவர்கள் இந்திய தூதர் வழங்கும் கேவலம் ஒரு வடைக்காகவும் பிளேன் ரீக்காகவும் தமிழ் இனத்தை காட்டிக் கொடுப்பதை பார்க்கும்போது சிரிக்க முடியவில்லை. வேதனையில் மனம் விம்முகிறது. இந்த கொடுமைக்கு எப்போது முடிவு வரும்?

No comments:

Post a Comment