Friday, March 25, 2022

திருமணம் முடித்த கையோடு தம் தாய் நிலம் காக்க

திருமணம் முடித்த கையோடு தம் தாய் நிலம் காக்க உக்ரைன் தம்பதிகள் துப்பாக்கி ஏந்தி போராட சென்றுள்ளனர். இதேபோன்று பல தம்பதிகள் ஈழத்திலும் தம் தாய்நிலம் காக்க போராட சென்றார்கள். கணவன் உயிரோடு இருக்கின்றாரா என்று தெரியாமல் மனைவி ஒரு போர் முனையிலும், மனைவி உயிரோடு இருக்கின்றாரா என்று தெரியாமல் கணவன் இன்னொரு முனையிலும் போராடினார்கள். இப்படி ஒரு நாள் இரு நாட்கள் அல்ல பல மாதங்களாக பிரிந்து நின்று போராடியிருக்கிறார்கள். ஆனால் உக்ரைன் தம்பதிகளின் போராட்டத்தை “தேசபக்தி” என்று புகழும் சர்வதேச ஊடகங்கள் ஈழத் தமிழ் தம்பதிகளின் போராட்டத்தை “பயங்கரவாதம்” என்கின்றனர். உக்ரைன் தம்பதிகளுக்கு ஒரு நியாயம். தமிழ் தம்பதிகளுக்கு இன்னொரு நியாயம். இதுதான் சர்வதேச நியாயமா?

No comments:

Post a Comment