Friday, March 25, 2022

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம், யோகேஸ்வரன் போன்றவர்களுடன் படத்தில் நிற்பவர்கள் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாபதி, கிருபாகரன், இன்பம், சந்ததியார், யோகராசா, செல்வம் (1976) அல்பிரட் துரையப்பாவை துரோகியென்றும் அவர் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசியதோடு துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்கு உதவியவர்கள் இவ் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே. அன்று அந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தர் ஐயா இன்று போராளிகள் மீது பழி சுமத்துகிறார். அதுமட்டுமல்ல, இந்த வரலாறு தெரியாமல் அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே சுமந்திரனும் போராளிகள் மீது பழி சுமத்துகிறார். சரி. பரவாயில்லை. துரோகி ஒழிப்பு தவறு என்று இப்போது உணர்ந்து விட்டதாக இவர்கள் கூறக்கூடும். அப்படியென்றால் இவர்களிடம் நாம் கேட்க விரும்புவது துரோகி ஒழிப்பு செய்யாமல் எப்படி போராட்டத்தை முன்னெடுப்பது? அல்லது துரோகி ஒழிப்பு செய்யாமல் உலகில் நடந்த போராட்டம் எது?

No comments:

Post a Comment