Friday, March 25, 2022

சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெள்யேறு என்று கூற

•சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெள்யேறு என்று கூற இந்து மக்கள் கட்சிக்கு தகுதி உண்டா? தமிழக தலைவர்களை சந்திக்க சென்ற சுமந்திரனை தமிழ்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்து மக்கள் கட்சி போராட்டம் முன்னெடுத்துள்ளது. சுமந்திரன் ராஜபக்சாவின் கைக்கூலி எனவும் அவர் ராஜபக்சா அரசை காப்பாற்றவே தமிழ்நாடு வந்துள்ளதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராஜபக்சே அரசை இந்து மக்கள் கட்சி எதிர்ப்பது உண்மை என்றால் அவர்கள் போராட வேண்டியது சுமந்திரனை எதிர்த்து அல்ல. இந்திய மோடி அரசை எதிர்த்தே போராட வேண்டும். ஏனெனில் இன்றுவரை ராஜபக்சே அரசை ஆதரித்து காப்பாற்றி வருவது இந்திய மோடியின் அரசே. இப்போதுகூட திவாலாகும் நிலையில் இருக்கும் இலங்கைக்கு கடன் கொடுத்து உதவுவது மோடி அரசே. ஐ.நா சபையில்கூட ராஜபக்சே அரசை இன்றுவரை காப்பாற்றி வருவது மோடியின் இந்திய அரசே. அதுமட்டுமல்ல, 39 வருடமாக தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்தியாவில் இருக்கும் இந்து ஈழ அகதிகளுக்கு குரல் கொடுக்காத இந்த இந்து மக்கள் கட்சியினர் ஈழத்தில் இருக்கும் இந்து தமிழருக்காக சுமந்திரனை எதிர்த்து குரல் கொடுப்பதாக கூறுவது ஏமாற்று வேலையாகும் எனவே இவர்கள் சுமந்திரனை எதிர்க்க தகுதி அற்றவர்கள் என்பதோடு இவர்களை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை.

No comments:

Post a Comment