Wednesday, April 27, 2022

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள்

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். இதே நாளில்தான் ஈழ பிரச்சினையை ஒட்டி மு.கருணாநிதி இடைவேளை உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை குறித்து எள்ளலுடன் பிரபஞ்சன் "இரண்டு உணவு இடைவெளிக்குள் ஒருவர் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறாரென்றால் இந்தியாவில் அனைவரும் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதமிருக்கின்றனர்." என்றார் எழுத்தாளர்கள், தங்களுக்கான குறுகிய எல்லைவட்டத்திலிருந்து வெளியே வந்து, சமுதாயத்தில் மக்களின் துயர்நீக்க ,அதில் பங்கு கொண்டு குரல்கொடுக்கவேண்டும் என்று கூறிய பிரபஞ்சன் அவர்கள், தன் இறுதிகாலம் வரை தமிழ்நாட்டின் உரிமைகள், மற்றும் ஈழதமிழ் உறவுகளின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களை ஆதரித்து பேசியும் எழுதியும் விழிப்புணர்வை ஏற்படுத்திய மக்களின் எழுத்தாளர். பிரபஞ்சன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment