Wednesday, April 27, 2022

பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு?

பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு? மக்கள் - ஐயா! இங்கிருந்த தரமுயர்த்தப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்தை காணவில்லை. பொலிஸ் - என்னது பிரதேச செயலகத்தை காணவில்லையா? மக்கள் - ஆமாய்யா. நாங்கள் சொல்வது பொய் என்றால் தரமுயர்த்தப்பட்ட பிரதேச சபைக்கு கணக்காய்வாளரை நியமித்த சுமந்திரனிடம் கேட்டுப் பாருங்கள். பொலிஸ் - சரி இப்ப அந்த கணக்காய்வாளர் எங்கே? மக்கள் - அவரையும் காணவில்லை ஐயா. பொலிஸ் - என்னது கணக்காய்வாளரையும் காணவில்லையா? என்ன விளையாடிறீங்களா? மக்கள் - ஐயா ! நாங்கள் சொல்வது பொய் என்றால் வியாளேந்திரன் சேரிடம் கேட்டுப்பாருங்கள். பொலிஸ் - அவரிடம் என்னத்தைக் கேட்பது? மக்கள் - கோத்தபாயா பதவி ஏற்றதும் மூன்று நாளில் கல்முனை பிரதேசசபை தர முயர்த்தப்படும் என்று சேர் எங்களுக்கு கூறியிருக்கிறார். இப்ப கோத்தபாயா பதவி ஏற்று 2 வருடத்திற்கு மேலாகிவிட்டது. அப்ப பிரதேச சபை வந்திருக்கும்தானே ஐயா? பொலிஸ் - ?????

No comments:

Post a Comment