Wednesday, April 27, 2022

உக்ரைனில் புச்சா நகரில்

உக்ரைனில் புச்சா நகரில் பல அப்பாவி மக்கள் ரஸ்சிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 360 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நடந்திருப்பது இனப்படுகொலை என்றும் இது குறித்து ஜ.நா விசாரணை செய்ய வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி கோரியுள்ளார். இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்திய அரசும் இப் படுகொலைகளை கண்டித்திருப்பதோடு இது குறித்த ஐ.நா விசாரணைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இங்கு எமது கேள்வி என்னவெனில் 360 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விசாரணைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இந்திய அரசு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதை கண்டித்து விசாரணை செய்ய ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அதுமட்டுமல்ல இன்றுவரை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சா கும்பலை ஜ.நா விசாரணையில் இருந்து இந்திய அரசே காப்பாற்றி வருகிறது. உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி. ஈழத் தமிழ் மக்களுக்கு இன்னொரு நீதி. இதுதானா இந்திய அரசின் நீதி?

No comments:

Post a Comment