Sunday, December 20, 2020

சர்வதேச கவனம் பெறும்

•சர்வதேச கவனம் பெறும் இந்திய விவசாயிகள் போராட்டம்! இந்திய விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்று ஜ.நா மன்றம் தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை கனடா பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விவசாயிகள் இந்தியா முழுவதும் நாடுதழுவிய பந்த் அறிவித்துள்ளார்கள். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் பாடகர் ஒருவர் ஒரு கோடி ரூபா அன்பளிப்பு செய்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இலக்கியவாதிகள் தமக்கு கிடைத்த விருதை திருப்பியளிகின்றன. இவ்வாறு நாளுக்குநாள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகின்றது. விவசாயிகள் கொடிய பனி மற்றும் கடுங் குளிருக்கு மத்தியிலும் போராட்டத்தை உறுதியுடன் தொடருகின்றனர். பல்வேறு தடைகளை போட்டு போராட்டத்தை தடுக்க முயன்ற அரசு அது பயன் அளிக்காததால் அவதூறுகளை பரப்புகின்றது. கொஞ்சம்கூட இரக்கம் இன்றி விவசாயிகளை தேசவிரோதிகள் என்றும் அந்நிய கைக்கூலிகள் என்றும் கூறுகின்றது. ஆனாலும் விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறும். அவர்களுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.

No comments:

Post a Comment