Thursday, December 31, 2020

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா?

தமிழ்நாடு தனிநாடு ஆகப் போகிறதா? தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று தோழர் தமிழரசன் கூறியபோது அவரை பிரிவினைவாதி என்றார்கள். பயங்கரவாதி என்றுகூறி கொன்றார்கள். ஆனால் இப்போது சிவசேனைக்கட்சி தலைவரே இந்தியா சோவியத்யூனியன் போல் உடைந்து சிதறப்போகின்றது என்று கூறியுள்ளார். இந்துமதம் மூலம் அகன்ற பாரதத்தை உருவாக்க முடியாது என்பதை மட்டுமல்ல இருக்கின்ற இந்தியாவைக்கூட தக்கவைக்க முடியாது என்பதை இந்துத்துவ கட்சி தலைவரே உணர்ந்துவிட்டார். காஸ்மீர் பிரிந்தால்கூட இந்தியா உடையாமல் இருக்கும். ஆனால் தமிழ்நாடு பிரிந்தால் இந்தியா நிச்சயம் உடையும். சிதறும். இதை இந்திய அரசு நன்கு உணர்ந்திருப்பதால்தான் அதன் முழு பலமும் தமிழ் இன உணர்வாளர்கள் மீது பயன்படுத்தி நசுக்கப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதுகூட தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என்ற இந்திய அரசின் அச்ச உணர்வின் வெளிப்பாடே. ஆனாலும் எத்தனை அடக்குமுறை இருந்தாலும் அத்தனையும் உடைத் தெறிந்து தமிழ் மக்கள் விடுதலை பெறுவர். ஏனெனில் வரலாறு அறிந்த காலம் முதல் தன்னைத்தானே ஆண்ட இனம் ஒருபோதும் அடிமைத்தனமாக நீண்ட காலம் வீழ்ந்து கிடக்காது. அது நிச்சயம் திமிறி எழும்!

No comments:

Post a Comment