Sunday, December 20, 2020

மூங்கில் பிரியாணியும்

•மூங்கில் பிரியாணியும் தொழில் அதிபர் திலீபன் மகேந்திரனும்! நான் பலவகை பிரியாணிகளை அறிந்திருக்கிறேன். அவற்றை சாப்பிட்டும் இருக்கிறேன். என்னை திண்டுக்கல் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காலங்களில் திண்டுக்கல் பொலிஸ்இன்ஸபெக்டர் பேமஸ் பிரியாணி என்று கூறி தலைப்பாகட்டு பிரியாணி வாங்கித் தந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இதவரை நான் மூங்கில் பிரியாணி சாப்பிட்டதும் இல்லை. அதை கேள்விப்பட்டதுகூட இல்லை. எனது முகநூலில் நண்பராக இருக்கும் திலீபன் மகேந்திரனின் முகநூல் பதிவுகளில் இருந்தே மூங்கில் பிரியாணியை இப்போது அறிகிறேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த திலீபன் மகேந்திரன் தேசியக்கொடியை எரித்தார் என்று கைது செய்யப்பட்டு பொலிசாரால் சித்திரவதை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதையைக் கண்டித்து நான் குரல் கொடுத்தேன். இதனால் நான்தான் அவரை இயக்குவதாகவும் அவருக்கு உதவி செய்வதாகவும்கூட இந்திய உளவு அமைப்புகள் சந்தேகப்பட்டன. உண்மை என்னவென்றால் நான் இதுவரையில் ஒருமுறைகூட திலீபன் மகேந்திரனுடன் பேசியதில்லை. சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன். திலீபன் மகேந்திரன் தற்போது சென்னையில் மூங்கில் பிரியாணி வியாபாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அவருடைய வியாபாரத்திற்கும் பல இடைஞ்சல் கொடுக்கிறார்கள். ஆனாலும் அவற்றை சமாளித்து தொடர்கிறார். அதுவும் பெட்டிக் கடைகூட சொந்தமாக இல்லை. ஆனாலும்; தன்னை கெத்தாக “தொழில் அதிபர்” என்று போடுகிறார். அவருடைய இந்த தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். குறிப்பு - இது ஒரு கட்டணம் இல்லாத விளம்பரம் என்று கருத வேண்டாம்.

No comments:

Post a Comment