Sunday, December 20, 2020

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து

தோழர் தமிழரசன் தாயாரின் மறைவை அடுத்து அவரது படத் திறப்பு விழாக்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து சென்னையில் படத்திறப்புவிழா நடத்தியுள்ளனர். தோழர் தமிழரசன் தாயாருக்கு வழங்கப்படும் இவ் மதிப்பு என்பது தோழர் தமிழரசனுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். தோழர் தமிழரசனை தவிhத்துவிட்டு இனியாரும் தமிழ்தேசியம் பேசிவிட முடியாது என்ற உண்மையை நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் கூறியிருக்கின்றன. இனிவரும் காலங்கள் தமிழரசன் காலமாக அமையட்டும். அவர் விரும்பிய தமிழ்தேசிய விடுதலை நிறைவேறட்டும்.

No comments:

Post a Comment