Thursday, December 31, 2020

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது!

•மம்தா பேனர்ஜியின் உணர்வு பாராட்டுக்குரியது! தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். மராட்டியர் ஆள அனுமதிக்க முடியாது என்று கூறினால் அதை தவறு என்கிறார்கள். அதுமட்டுமன்றி தமிழன் என்றால் யார் என்று நக்கலாகவும் கேட்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தை ஒரு வங்காளிதான் ஆள வேண்டும். குஜராத்தி ஆள அனுமதிக்க முடியாது என்று மம்தா கூறும்போது அதை தவறு என்று இவர்கள் கூறுவதில்லை. அதுமட்டுமன்றி வங்காளி என்றால் யார் என்று தைரியமிருந்தால் மம்தாவிடம் இவர்கள் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏனெனில் தமிழனை இளிச்சவாயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள். மம்தாவின் அரசியல்; உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் இன உணர்வு நிச்சயம் பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment