Thursday, December 31, 2020

தனது அரசியல் பிரவேசம் குறித்து

தனது அரசியல் பிரவேசம் குறித்து எதிர்பார்த்த எழுச்சி ஏற்படாதது கண்டு ஏமாற்றம் அடைந்திருப்பார். கள நிலவரம் தனக்கு சாதகமாய் இல்லை என்பதை நாலு நல்ல நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டிருப்பார். பெரும் முதலாளிகள் பணம் தர தயங்கியதில் இருந்து தான் ஒடும் பந்தயக் குதிரை இல்லை என்பதை புரிந்திருப்பார். அவர் ஒரு சிறந்த நடிகர். நிச்சயம் பிளாப் என்று தெரிந்த படங்களில் அவர் நடித்ததில்லை. அதுபோல் நிச்சயம் தோல்வி என்று தெரிந்த பின்பு அரசியலில் போட்டியிட அவர் விரும்பவில்லை. தப்பித்துக்கொண்டது தமிழகம் அல்ல ரஜனிதான். ஏனெனில் போட்டியிட்டிருந்தால் தன் சொந்த பணத்தை மட்டுமல்ல புகழையும் இழந்திருப்பார். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் ரஜனிக்கு இந்தளவு தெளிவாகவும் உறுதியாகவும் முடிவை உணர வைத்தவர்கள் தமிழக மக்களே.

No comments:

Post a Comment