Thursday, December 31, 2020

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார்

ஒரு நடிகர்; தேர்தலுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டார் இன்னொரு நடிகர் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் முடிவு எடுப்பார். நாலு படம் நடித்துவிட்டாலே தமிழ்நாட்டையும் தமிழனையும் ஆளும் தகுதி வந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு முடிவு கட்டும் காலம் இது! படிப்பறிவற்ற பின்தங்கிய மாநிலங்கள் என்று கூறப்படும் வட இந்திய மாநிலங்களில் கூட நடிகர்கள் கட்சி தொடங்கவில்லை. ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பிழைக்க வந்தவன் எல்லாம் தமிழனை ஆள வேண்டும் என்று துடிக்கிறான். அதனால்தான் கைபர் கணவாய் மூலம் வந்தவனிடம் அதிகாரத்தை இழந்துவிட்டு தன் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்கும்படி கெஞ்சும் நிலை தமிழனுக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment