Sunday, December 20, 2020

தீ பரவட்டும்!

•தீ பரவட்டும்! அதில் மோடி அரசு பொசுங்கட்டும்!! ஒருபுறம் கடுங்குளிரில் இதுவரை இரண்டு விவசாயிகள் இறந்து விட்டனர். மறுபுறத்தில் போராட்டத்தில் பங்குபற்ற பெண் விவசாயிகள் அணி திரள்கிறார்கள். இதோ ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு பெண்ணே டிராகடர் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறார் டில்லி நோக்கி வீதியில் பாரிய கொன்கிரீட் கற்களை போட்டு மறித்தார்கள் வீதியில் பாரிய பள்ளங்களை தோண்டியும் மறித்தார்கள். வீதியில் வரும் விவசாயிகள் மீது தண்ணியை பீச்சி அடித்துப் பார்த்தார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி விவசாயிகள் வீறு நடை போடுகின்றனர். காயம்பட்ட விவசாயிகள் சிகிச்சை பெற செல்லாமல் தொடர்ந்தும் போராடுகிறார்கள். அதைவிட அதிசயம். தம்மை அடித்து காயப்படுத்திய பொலிசாரின் தாகத்திற்கும் அவர்களே தண்ணீர் கொடுக்கின்றனர். ஆனால் அரசோ கொஞ்சம்கூட இரக்கம் இன்றி இவ் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் கூசாமல் கூறுகின்றது. விவசாயிகள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.

No comments:

Post a Comment