Thursday, August 14, 2014

இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

 இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே
இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

இலங்கை அரசின் பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்வரை தரக்குறைவாக கிண்டல் செய்யப்பட்ட கட்டுரைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததன் பயனாய் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த ஆட்சியில் கலைஞா கருணாநிதி பல முறை கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் அதைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல் இப்போது ஜெயா அம்மையார் பல கடிதங்களை எழுதுகிறார். இன்றைய பிரதமர் மோடி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தானே இலங்கை அரசு கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டது!

எனவே தமிழக கட்சிகள் முதலில் இலங்கை அரசைக் கண்டிப்பதைவிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாயக்கும் நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு அடிமை நிலையில் இருந்து விடுபட்டு சுய அதிகார மிக்க சுதந்திர தேசமாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு ஆதரவு வழங்கிய தைரியத்திலேயே இலங்கை அரசு இப்படி பயமின்றி திமிர்த்தனமாக நடந்து கொள்ள முனைகிறது.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்தவர் தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றார். பின்னர் ஜெயா அம்மையாரை தரக்குறைவாக கிண்டல் செய்து கார்ட்டுன் போடப்பட்டது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டப்படாததாலேயே தற்பொது இந்தளவு தைரியமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது.

அது மட்டுமல்ல சுப்பிரமணியசுவாமி , சோ, “இந்து” ராம் போன்றவர்கள் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து அக்கறை காட்டத்தேவையில்லை என்று இலங்கை சென்று கூறுவதும் அரசியல் தரகு வேலைகளுக்கு பரிசுப்பொருட்கள் வெளிப்படையாக பெறுவதும் பற்றி இந்திய அரசு கண்டடுகொள்ளாமல் இருப்பதும் இலங்கை அரசுக்கு தைரியத்தை கொடுக்கின்றன.

இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் 600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது சொந்த மீனவர்களை கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதானே! இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசுக்கு தமிழக மக்களைவிட இலங்கை அரசுதானே முக்கியம்.

தமிழக மக்கள் இந்தியாவில் அடிமையாக இருப்பதால்தான்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதை நிறுத்த முடியவில்லை!

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமிழக மண்ணிலேயே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை!

• இதை தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் உணர்ந்து அடிமைநிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறும்போது இலங்கை அரசு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளும்.

Photo: • இந்தியாவில் தமிழகம் அடிமையாக இருப்பதால்தானே
 இலங்கை அரசு தைரியமாக கிண்டல் செய்கிறது!

இலங்கை அரசின் பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்வரை தரக்குறைவாக கிண்டல் செய்யப்பட்ட கட்டுரைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததன் பயனாய் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

கடந்த ஆட்சியில் கலைஞா கருணாநிதி பல முறை கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் அதைக் கண்டு கொள்வதில்லை. அதுபோல் இப்போது ஜெயா அம்மையார் பல கடிதங்களை எழுதுகிறார். இன்றைய பிரதமர் மோடி அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தானே இலங்கை அரசு கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டது! 

எனவே தமிழக கட்சிகள் முதலில் இலங்கை அரசைக் கண்டிப்பதைவிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவிசாயக்கும் நிலையை உருவாக்கவேண்டும். தமிழ்நாடு அடிமை நிலையில் இருந்து விடுபட்டு சுய அதிகார மிக்க சுதந்திர தேசமாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சியில்  இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளுக்கு ஆதரவு வழங்கிய தைரியத்திலேயே இலங்கை அரசு இப்படி பயமின்றி திமிர்த்தனமாக நடந்து கொள்ள முனைகிறது.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்தவர் தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றார். பின்னர் ஜெயா அம்மையாரை தரக்குறைவாக கிண்டல் செய்து கார்ட்டுன் போடப்பட்டது. இதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டப்படாததாலேயே தற்பொது இந்தளவு தைரியமாக இலங்கை அரசு நடந்து கொள்கிறது. 

அது மட்டுமல்ல சுப்பிரமணியசுவாமி , சோ, “இந்து” ராம் போன்றவர்கள் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல்வாதிகள் குறித்து அக்கறை காட்டத்தேவையில்லை என்று இலங்கை சென்று கூறுவதும் அரசியல் தரகு வேலைகளுக்கு பரிசுப்பொருட்கள் வெளிப்படையாக பெறுவதும் பற்றி இந்திய அரசு கண்டடுகொள்ளாமல் இருப்பதும் இலங்கை அரசுக்கு தைரியத்தை கொடுக்கின்றன.

இலங்கை கடற்படையால் இதுவரை தமிழக மீனவர்கள் 600 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது சொந்த மீனவர்களை கொல்லும் அந்நிய நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாதானே! இதன் அர்த்தம் என்ன? இந்திய அரசுக்கு தமிழக மக்களைவிட இலங்கை அரசுதானே முக்கியம்.

தமிழக மக்கள் இந்தியாவில் அடிமையாக இருப்பதால்தான்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவதை நிறுத்த முடியவில்லை!

கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தடுத்து நிறுத்த முடியவில்லை!

தமிழக மண்ணிலேயே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதை தடுக்க முடியவில்லை!

• இதை தமிழக மக்களும் தமிழக அரசியல் கட்சிகளும் உணர்ந்து அடிமைநிலையில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெறும்போது இலங்கை அரசு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளும்.

No comments:

Post a Comment