Thursday, August 14, 2014

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.

கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.

இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

Photo: • தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களுக்கு புரட்சிகர அஞ்சலிகள்!

மாக்சிய லெனியமாவோயிச சிந்தனையின் வழிகாட்டலில் புதியஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்த தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் நேற்று (29.07.2014) காலமானார். யாழ்ப்பாணம் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிப் பணியாற்றினார்.

தோழர் சண்முகதாசன் தலைமையின் வழிகாட்டலில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள். அந்த வரலாற்றை சொல்லக்கூடியவர் என  தோழர் டானியல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவர் லண்டனுக்கு வநதபோது அவரை நான் முதன் முதலாக சந்தித்தேன். “தேசம்” சார்பாக தயாரிக்கப்பட்ட தோழர் சண் குறித்த ஆவணப்படத்திற்கு அவருடைய கருத்துகளை இணைப்பதற்காக அவரை நானும் பி.பி.சி தமிழோசை அறிவிப்பாளர் சீவகன் அவர்களும் சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சியுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதுமட்டுமல்ல தோழர் சண் எழுதிய புத்தக வெளியீட்டிலும் பங்கு பற்றி தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார்.

கீழ்வரும் இணைப்பில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தோழர் சண் அவர்களின் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரையை கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=fKAv3mAMCKc&feature=youtu.be

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும்போதே “துப்பாக்கியின் நிழலில் சாதீயம் உறங்கிறது” என்று உண்மையை தைரியமாக கூறியவர். தனது கருத்துகளை எப்போதும் தயக்கமின்றி கூறுபவர். இறுதிவரை தன் கொள்கைகளில் இருந்து வழுவாமல் உறுதியுடன் வாழ்ந்தவர்.

இலங்கை புரட்சிவரலாற்றில் தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் பெயரும் பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அவருடைய நினைவாக புதியஜனநாயகப் புரட்சியை  நாம் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

No comments:

Post a Comment