Sunday, August 31, 2014

இது தான் மகிந்த சிந்தனையா?

இது தான் மகிந்த சிந்தனையா?

செய்தி- பாலஸ்தீனத்திற்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு

இலங்கை முழுவதும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக என்றுமில்லாதவாறு யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பணம் இல்லையாம். ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு ஏன் இப்படி செய்கிறது?

இலங்கையில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகிறது. அண்மையில் அழுத்கமவில் கோடிக்கணக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவி வழங்குவது எதற்காக? உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதற்காகவா?

காரைநகரில் ஒரு சிறுமி ராணுவத்தால் நாசமாக்கப்பட்டாள். அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதேவேளை மன்னாரில் ஒரு மாணவி ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மகிந்த அரசு மன்னார் ஆயர் புலியாம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அண்மையில் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அரச ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னைத்தானே தாக்கி காயப்டுத்திக் கொண்டதாக மகிந்தவின் பொலிஸ் கண்டு பிடித்துள்ளது.

இதே ரேஞ்சில் போனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தாங்களாவே வந்து சிறையில் குந்தி இருப்பதாக மகிந்த கூறுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.

இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டு இறந்தார்கள் என்று மட்டும் தயவு சொல்லிவிடாதீர்கள் மகிந்த அவர்களே! ஏனெனில் இதை தாங்கும் சக்தி எமக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே இல்லை.

குறிப்பு- தயவு செய்து இந்த பதிவை சிரிக்காமல் படிக்கவும். இதுதான் இலங்கை மக்களின் இன்றைய நிலை.

Photo: • இது தான் மகிந்த சிந்தனையா?

செய்தி- பாலஸ்தீனத்திற்கு இலங்கை அரசு ஒரு மில்லியன் டாலர் அன்பளிப்பு

இலங்கை முழுவதும் வறட்சி காணப்படுகிறது. குறிப்பாக என்றுமில்லாதவாறு யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க பணம் இல்லையாம். ஆனால் பாலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு ஏன் இப்படி செய்கிறது?

இலங்கையில் முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுகிறது. அண்மையில் அழுத்கமவில் கோடிக்கணக்கணக்கான சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உதவி வழங்குவது எதற்காக? உலக முஸ்லிம் நாடுகளை ஏமாற்றுவதற்காகவா?

காரைநகரில் ஒரு சிறுமி ராணுவத்தால் நாசமாக்கப்பட்டாள். அதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதேவேளை மன்னாரில் ஒரு மாணவி ராணுவத்தால் சீரழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மகிந்த அரசு மன்னார் ஆயர் புலியாம், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அண்மையில் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அரச ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறான். ஆனால் அவன் தன்னைத்தானே தாக்கி காயப்டுத்திக் கொண்டதாக மகிந்தவின் பொலிஸ் கண்டு பிடித்துள்ளது. 

இதே ரேஞ்சில் போனால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தாங்களாவே வந்து சிறையில் குந்தி இருப்பதாக மகிந்த கூறுவாரோ என்று அச்சமாக இருக்கிறது.

இதைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டு இறந்தார்கள் என்று மட்டும் தயவு சொல்லிவிடாதீர்கள் மகிந்த அவர்களே! ஏனெனில் இதை தாங்கும் சக்தி எமக்கு மட்டுமல்ல உலகில் யாருக்குமே இல்லை.

குறிப்பு- தயவு செய்து இந்த பதிவை சிரிக்காமல் படிக்கவும். இதுதான் இலங்கை மக்களின் இன்றைய நிலை.

No comments:

Post a Comment