Thursday, August 14, 2014

தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

• தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

வன்னியர் சங்கம் அமைத்து வன்னியர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தோழர் தமிழரசன் ஒரு வன்னியராக இருந்தும்கூட அவர் பெயரை ஒரு முறைகூட உச்சரித்தது இல்லை.

மாவீரன் அலெக்சாண்டர், சீசர் என்று வெளிநாட்டவர் பெயரை எல்லாம் குறிப்பிட்டு பேசும் புரட்சிப்புயல் வைகோ அவர்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடி மடிந்த தோழர் தமிழரசன் பெயரை ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.

தமிழர்களுக்காகப் போராடி மடிந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்த அய்யா நெடுமாறன் அவர்கள், அதில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்கவில்லை. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் இறக்கும்வரை அவருடன் தொடர்பில் இருந்து அவருக்கு முழு ஆதரவு கொடுத்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள்.

தமிழ் தேசியத்திற்காக களமாடுவதாக குறிப்பிடும் “நாம் தமிழர்” தலைவர் சீமான் கூட தமிழ் தேசியத்திற்காய் போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் அவர்களை இதுவரை நினைவு கூரவில்லை. அறிஞர் பெருஞ்சித்திரனாருக்கு நினைவு தினம் கொண்டாடியவர்கள் அந்த பெருஞ்சித்திரனார் போற்றிப் புகழ்ந்த தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகின்றனர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களையும் அவருடைய தலைவர் புலவர் கலியபெருமாள் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். பெண்ணாடத்தில் நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நினைவு கூட்டத்திலேயே திருமாவளவன் தோழர் தமிழரசன் குறித்த பாராட்டுக்குரிய உரையை நிகழ்த்தினார்.

கீழ்வரும் இணைப்பில் அதனைக் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=q3Q3FR7DazE&feature=youtu.be

திருமாவளவன் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் இருப்பினும் அவருடைய இந்த தமிழரசன் குறித்த உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

Photo: • தோழர் தமிழரசன் பற்றிய தொல்.திருமாவளவனின் பாராட்டுக்குரிய உரை

வன்னியர் சங்கம் அமைத்து வன்னியர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தோழர் தமிழரசன் ஒரு வன்னியராக இருந்தும்கூட அவர் பெயரை ஒரு முறைகூட உச்சரித்தது இல்லை.

மாவீரன் அலெக்சாண்டர், சீசர் என்று வெளிநாட்டவர் பெயரை எல்லாம் குறிப்பிட்டு பேசும் புரட்சிப்புயல் வைகோ அவர்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடி மடிந்த தோழர் தமிழரசன் பெயரை  ஒருபோதும் குறிப்பிடுவதில்லை.

தமிழர்களுக்காகப் போராடி மடிந்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைத்த அய்யா நெடுமாறன் அவர்கள், அதில் தோழர் தமிழரசன் பெயரை பொறிக்கவில்லை. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் இறக்கும்வரை அவருடன் தொடர்பில் இருந்து அவருக்கு முழு ஆதரவு கொடுத்தவர் அய்யா நெடுமாறன் அவர்கள்.

தமிழ் தேசியத்திற்காக களமாடுவதாக குறிப்பிடும் “நாம் தமிழர்” தலைவர் சீமான் கூட தமிழ் தேசியத்திற்காய் போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் அவர்களை இதுவரை நினைவு கூரவில்லை. அறிஞர் பெருஞ்சித்திரனாருக்கு நினைவு தினம் கொண்டாடியவர்கள் அந்த பெருஞ்சித்திரனார் போற்றிப் புகழ்ந்த தோழர் தமிழரசனை நினைவு கூர தயங்குகின்றனர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தோழர் தமிழரசன் அவர்களையும் அவருடைய தலைவர் புலவர் கலியபெருமாள் அவர்களையும் நினைவு கூர்ந்துள்ளார். பெண்ணாடத்தில் நடைபெற்ற புலவர் கலியபெருமாளின் நினைவு கூட்டத்திலேயே திருமாவளவன் தோழர் தமிழரசன் குறித்த பாராட்டுக்குரிய உரையை நிகழ்த்தினார்.

கீழ்வரும் இணைப்பில் அதனைக் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=q3Q3FR7DazE&feature=youtu.be

திருமாவளவன் அரசியல் குறித்து பல விமர்சனங்கள் இருப்பினும் அவருடைய இந்த தமிழரசன் குறித்த உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment