Sunday, August 31, 2014

டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்

• டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்
இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்க போவது என்ன?

தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை
டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார்.

இந்தியாவுக்கு பூரண விசுவாசியாக இருந்துள்ளாரேயொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி.
குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை.
அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை.

சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களை இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை

ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.

ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும், இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும்
அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும்
தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும்
இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும்
தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும்
கூட்டமைப்பினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இவர்களது இந்திய விசுவாசம்
இலங்கை தமிழர்களுக்கு
இதுவரை எதையும் சாதிக்கவில்லை.
இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை.

இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர
தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

Photo: • டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் 
இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்க போவது என்ன?

தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை 
டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார். 

இந்தியாவுக்கு பூரண விசுவாசியாக இருந்துள்ளாரேயொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி.
குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை. 
அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை.

சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களை  இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை

ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.

ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும்,  இந்தியாவை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும் 
அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும்
தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும்
இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும்
தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் 
கூட்டமைப்பினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இவர்களது இந்திய விசுவாசம்
இலங்கை தமிழர்களுக்கு 
இதுவரை எதையும் சாதிக்கவில்லை.
இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை.

இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர
தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment