Sunday, November 29, 2020

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனோவினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தல் முகாம்களில் இடம் இன்றி திணறுவதாக இராணுவ தளபதியே ஒப்புதல் அளிக்கிறார். போற போக்கைப் பார்த்தால் கொரோனோ இல்லாதவர்களைத்தான் தனிமைப்படுத்துவார்கள் போல் இருக்கிறது. புலிகளை அடக்கிய எங்களுக்கு கொரோனோவை அடக்குவது பெரிய விடயம் இல்லை என்று வாய்ச்சவடால் விட்ட அமைச்சர் ஒருவர் இப்போது வாய் திறக்க முடியாமல் இருக்கிறார். கோரோனோவை சிறப்பாக அடக்கிய நாடு என இலங்கை பெயர் பெற்றுள்ளது என்று தேர்தலுக்கு முன்னர் கூறிய சுகாதார அமைச்சர் இப்போது மந்திரிக்கப்பட்ட பானைகளை ஆற்றில் போட்டுக்கொண்டு திரிகிறார். ஆக, கொரோனோவைக் கட்டுபடுத்த முடியாமல் இலங்கை அரசு திணறுகிறது என்பது நன்கு வெளிச்சமாகியுள்ளது. எந்த மக்கள் நம்பிக்கையுடன் இந்த அரசை தெரிவு செய்தார்களோ அந்த மக்களை காக்கத் தவறியுள்ளது இந்த அரசு. அந்த மக்கள் மத்தியில் நன்கு அம்பலமாகி வருகிறது இந்த அரசு.

No comments:

Post a Comment