Sunday, November 29, 2020

நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை!

•நாம் பெருமூச்சுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை! இவர் பீகார் மாநிலத்தில் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தோழர் மெஹபூப் ஆலம் 53,597 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காவது முறையாக வென்றது ஆச்சரியம் இல்லை. நான்குமுறை வென்றபின்பும் இப்போதும் மண்குடிசை வீட்டில் வாழ்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இப்பவும் அரச பஸ்ஸில்தான் பயணம் செய்கிறார். எமக்கும் எம்பி யாக சிலர் வந்து வாய்ச்சிருக்கிறார்கள். வென்றதும் இவர்களுக்கு சொகுசு பங்களா வேண்டும். 5 கோடி ரூபாயில் சொகுசு வாகனம் வேண்டும். அதைவிட தமிழ் மக்கள் மத்தியில் வருவதற்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும். நாம் எமது எம்.பி களை நினைத்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment