Sunday, November 29, 2020

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்!

ஜேக்கப் மேரியம்மாவுக்கு அஞ்சலிகள்! புலிகள் இயக்க உறுப்பினர் வரதன் அவர்கள் மலையகத்தில் சயனைட் அருந்தி இறந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஜேக்கப் மேரியம்மா கைது செய்யப்பட்டார். மேரியம்மா கைது செய்யப்பட்டபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம் அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தார். கடும் சித்திரவதை மற்றும் நீண்டகால சிறைவாசத்தின் பின் மேரியம்மா விடுதலை செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக சுகவீனமுற்றிருந்த மேரியம்மா அவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள். இந்த தாயின் தியாகம் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மலையக தமிழ்மக்களின் பங்களிப்பை காட்டும் ஒரு உதாரணம் ஆகும். இனியாவது முரளியின் பட பிரச்சனையின் போது கருத்து தெரிவித்த தமிழக ஊடகவியலாளர் போன்றவர்கள் இந்த உண்மையை அறியட்டும்.

No comments:

Post a Comment