Sunday, November 29, 2020

இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல்

இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்பும் எப்படி இந்த இளைஞனால் எழுந்து நிற்க முடிகிறது? ஏனெனில் இவர் இழந்தது ஒரு காலையே ஒழிய உணர்வை அல்ல. அதனால்தான் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக நிற்க முடிகிறது. வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது? எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது. ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.

No comments:

Post a Comment