Sunday, November 29, 2020

இவர்கள் மூவரும் இலங்கையர்கள்.

இவர்கள் மூவரும் இலங்கையர்கள். இவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். ஒருவர் கைதடியில் எட்டு தமிழர்களை கொன்று அதனால் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரர். மற்றவர் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி ஜோசப்பரராயசிங்கத்தைக் கொன்றமையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழர் பிள்ளையான். இன்னொருவர் புலிப்போராளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 12 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதியான தேவதாசன். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல தான் தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாக செயற்படுவேன் என கோத்தபாயா கூறியிருந்தார். ஆனால் பதவிக்கு வந்ததும் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை உடனடியாக விடுதலை செய்தார். தற்போது தமக்கு ஆதரவாக கொலை செய்த பிள்ளையானை பிணையில் விடுதலை செய்துள்ளார். ஆனால் தேவதாசன் தனக்கு விடுதலை கோரவில்லை. மாறாக தன்னுடைய வழக்கை விசாரணைக்கு எடுத்து நீதி வழங்குமாறே கேட்டிருக்கிறார். தான் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று வாக்குறுதி அளித்த கோத்தபாயா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதது மட்டுமன்றி வழக்கு விசாரணைக்குகூட எடுக்க மறுக்கிறார். கொலை செய்து மரண தண்டனை பெற்றவருக்கு விடுதலை. கொலை செய்து நீதிமன்ற விசாரணையை எதிர் கொண்டவருக்கு விடுதலை ஆனால் புலிக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு 12 வருடமாகியும் விடுதலை செய்யாதது மட்டுமன்றி வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூட தயாரில்லை. இதுதான் இலங்கை அரசின் நியாயம்! குறிப்பு – தமிழ் மக்கள் மீது சம்பந்தர் ஐயாவுக்கு அக்கறை இல்லை. தாங்கள் பதவிக்கு வந்ததும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று நாமல் என்ற தம்பி கூறினார். அந்த தம்பியை யாராவது கண்டீர்களா?

No comments:

Post a Comment