Sunday, November 29, 2020

சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்!

•சம்பந்தர் ஐயாவும் கொரோனோவும்! திருகோணமலையில் வசிக்கும் ஒரு ஏழைத் தமிழ் சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு தாயிடம் பணம் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தான். தாயிடம் பணம் இல்லை. ஆனாலும் மகனைச் சமாளிப்பதற்காக “கடவுளிடம் கேள் அவர் தருவார்” என்று கூறினார். இதைக் கேட்ட சிறுவன் உடனே “ அன்புள்ள கடவுளே! எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட உடன் 200 ரூபா அனுப்பி வையுங்கள்” என்று எழுதி கடவுள், திருகோணமலை என முகவரியிட்டு கடிதம் அனுப்பினான். கடிதத்தைக்கண்ட தபாற்கந்தோர் ஊழியர் ஒருவர் அக் கடிதத்தை குசும்பாக சம்பந்தர் ஐயாவின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். கடிதத்தைப் படித்த சம்பந்தர் ஐயா பொதுவாக பண உதவி செய்வதில்லை. ஆனாலும் இச் சிறுவனுக்கு உதவ விரும்பினார். ஏனெனில் இந்த கொரோனோ நேரத்தில் ஒரு சிறுவனுக்கு உதவி செய்தால் தன் பெயர் பத்திரிகைகளில் அடிபடும் என அவர் நினைத்தார். ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 200 ரூபா அதிகம். எனவே 100 ரூபா அனுப்பினால் போதும் என நினைத்து 100 ரூபா பணத்தை அனுப்பினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன் உடனே கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினாhன். அதில் “கடவுளே! பணம் அனுப்பியமைக்கு நன்றி. ஆனால் இனி சம்பந்தர் ஐயா மூலம் அனுப்ப வேண்டாம். ஏனெனில் அவர் 200 ரூபாவில் 100 ரூபாவை சுருட்டிவிட்டு எனக்கு 100 ரூபா மட்டுமே அனுப்பி வைத்துள்ளார்” என்று எழுதியிருந்தான். இது இணையவெளியில் வந்த ஒரு நகைச்சுவை துணுக்கு. அமெரிக்கா ஜனாதிபதி பற்றி வந்த இந்த பகிடியை சம்பந்தர் ஐயாவுக்கு நான் மாற்றியிருக்கிறேன். சரி பகிடியை விடுவோம். இப்போது சீரியஸ் மேட்டருக்கு வருவோம். கடந்த வாரம் சம்பந்தர் ஐயா இந்திய தூதரை சந்தித்து பேசியதாக செய்திகள் வந்திருந்தன. அதன்பின்பு இந்திய தூதரகத்தில் பணிபரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சம்பந்தர் ஐயாவால் தூதரக ஊழியருக்கு கொரோனோ வந்ததா அல்லது தூதரக ஊழியரால் சம்பந்தர் ஐயாவுக்கு தொற்று எற்படுமா என ஆராய்வது என் பதிவின் நோக்கம் இல்லை. மாறாக, இலங்கை சட்டப்படி சம்பந்தர் ஐயா முகாமில் தனிமைப்படுத்தப்படுவாரா இல்லையா என்பதை அறிவதே நோக்கமாகும்.

No comments:

Post a Comment