Sunday, November 29, 2020

போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில்

•போலி என்கவுண்டர் கொலைகள் செய்வதில் சங்கிகளும் கம்யுனிஸ்ட்டுகளும் ஒன்றே ! ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தமிழர்களை சுட்டு சுட்டு பிணங்களாக கேரள அரசு தமிழ்நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஏன் தமிழனைக் கொல்கின்றீர்கள் என்று கேட்காவிட்டாலும் ஒரு மனிதனை ஏன் விசாரணையின்றி சுட்டுக் கொல்கிறீர்கள் என்றாவது யாராவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் சங்கிகள் போலி என்கவுண்டர் மோதலில் கொல்வதைக் கண்டிக்கும் மனிதவுரிமைவாதிகள் யாரும் கேரள கம்யுனிஸ்ட் அரசு செய்யும் இக் கொலைகளை கண்டிப்பதில்லை. இத் தமிழர்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் எனவே சுட்டுக் கொல்வதாக கேரள கம்யுனிஸ்ட் அரசு கூறுகிறது. ஆனால் விசாரணையின்றி கொலை செய்யும் கேரள அரச பயங்கரவாதமே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தைவிட கொடுமையானது என்று உச்சநீதின்றம் கூறியுள்ளது. ஒருபுறம் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர அரசு தமிழர்களை சுட்டுக் கொல்கிறது. மறுபுறம் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் என்று கேரள அரசு சுட்டுக் கொல்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்களை இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது. இப்படி எல்லாபுறமும் தமிழன் எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டால் அதன் அர்த்தம் என்ன? கேட்பதற்கு யாருமற்ற அனாதை தமிழன் என்று நினைக்கிறார்களா அல்லது தமிழன் உயிர் பெறுமதி அற்றது என கருதுகிறார்களா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழன் உயிர் ஒன்றும் மயிர் இல்லை என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment