Sunday, November 29, 2020

தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்!

•தோழர் வேல்முருகனுக்கு அஞ்சலிகள்! கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கொய்த்துப்பாற மீன்முட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள வனப்பகுதியில், திங்கள் கிழமை கேரள காவல்துறையின் தண்டர்போல் அதிரடிப்படையினரால் தமிழகத்தின் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சார்ந்த தோழர் வேல்முருகன் (32) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் வேல்முருகன், மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றவர். தேனி மாவட்டம் முருகமலையில் ஆயுதப்பயிற்சி எடுத்ததாகக் கூறி, 2007ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட தோழர் வேல்முருகன், அந்த வருடமே ஒடிசா மாநிலம் கோராபுட் சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு வருடங்களுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார். கேரள பினராயி அரசின் போலி மோதல் என்கவ்ண்டரை, வன்மையாகக் கண்டிப்போம்.

No comments:

Post a Comment