Sunday, November 29, 2020

இந்த அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் யார்?

•இந்த அற்புதங்களை நிகழ்த்துபவர்கள் யார்? சரணடைந்த மருத்தவர் வரதராஜனை ஊடகங்களுக்கு முன்னால் பேட்டி கொடுக்க வைத்தார் கோத்தபாயா. இப்போது அந்த வரதராஜன் ஜ.நாவில் இலங்கை அரசுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார். அடுத்து தமிழ்செல்வனின் மனைவியை பேட்டி கொடுக்க வைத்தார் கோத்தபாயா. ஆனால் அதே தமிழ்செல்வனின் மனைவி பிரான்சில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த பதினொரு வருடமாக போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் எதிராக கருத்து கூறி வந்தவர் சுமந்திரன். போராளிகளும் கொலை செய்துள்ளார்கள் அதுவும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். இப்போது அதே சுமந்திரன் சிங்கள அதிரடிப்படையின் பாதுகாப்புடன் சென்று மாவீரருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல எந்த போராளிகளை வன்முறையாளர்கள் என்றாரோ அந்த போராளிகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்று வாதாடுகிறார். இதே வரிசையில் அடுத்தது யார் என்று அறிவதைவிட இந்த மாற்றங்களை நிழ்த்துபவர்கள் யார் என்பதை அறிவதே முக்கியமானது. இத்தகைய அற்புதங்களுக்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கியமானவர்கள் மக்கள் மட்டுமே. குறிப்பாக புலம்பெயர் மக்களே இந்த அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள். புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். அதுமட்டுமன்றி அவர்கள் தமிழக சக்திகளையும் தம்முடன் இணைத்து போராடுகிறார்கள். தன்னை வெறும் 40 லட்சம் ஈழத் தமிழர்கள் மட்டுமே எதிர்ப்பதாக கோத்தபாயா இதவரை நினைத்து வந்தார். ஆனால் தமிழக ஏழு கோடி தமிழர்களையும் சேர்த்து மொத்தம் ஏழு கோடியே நாற்பது லட்சம் தமிழ் மக்களை எதிர்க்க நேரிடும் என்பதை கோத்தபாயா நினைத்தக்கூட பாhத்திருக்க மாட்டார். இந்த அற்புதத்தையும் புலம்பெயர் ஈழத் தமிழர்களே நிகழ்த்துகின்றனர். இனிவரும் காலங்களில் இன்னும் பல அற்புதங்களை இவர்கள் நிகழ்த்துவார்கள். ஏனெனில் மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டைவிட வலிமையானது. இதை கோத்தபாயா விரைவில் உணரவைப்பார்கள்..

No comments:

Post a Comment