Sunday, November 29, 2020

புட்டு வென்றது

புட்டு வென்றது இகழ்ந்து பேசிய சிங்கள பொலிஸ் அதிகாரி பகிரங்க மன்னிப்பு கோரினார். சிலர், சுமந்திரன் கண்டனம் தெரிவித்தமையினால்தான் இது நடந்து என்பார்கள். இன்னும் சிலர், நீதிபதி அதிருப்தி தெரிவித்தமையினால் நடந்தது என்பார்கள். வேறு சிலர், அங்கஜன்தான் காரணம் என்றும் சொல்லக்கூடும். ஆனால் இது மக்கள் காட்டிய எதிர்பினால்தான் நடந்தது என்பதே உண்மை. மக்கள் மகத்தானவர்கள். அதுவும் தமிழ் மக்கள் மேலும் மகத்தானவர்கள். குறிப்பு – வெள்ளைக்காரர் உணவை பச்சையாகவோ அல்லது சுட்டோ சாப்பிட்ட காலத்தில் உணவை அவித்து சாப்பிட்டவன் தமிழன். அவர்கள் நீராவியில் ரயில் கண்டு பிடிக்க முன்னரே நீராவியில் புட்டு அவித்து சாப்பிட்டவன் தமிழன். தமிழனின் புட்டு இந்தளவு மகத்தானது என்பதை அந்த சிங்கள பொலிஸ் அதிகாரி அறிந்திருக்கமாட்டார்.

No comments:

Post a Comment