Sunday, November 29, 2020

இத்தனை வருடங்களாக ஓடியும்

இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லை ஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான். எதுவுமே எளிமை இல்லைதான் ஆனால் அனைத்துமே சாத்தியம்தான். ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் கிடைத்தால் புத்திசாலி தன் கோடரியை கூர்மையாக்க 4 மணி நேரத்தை செலவு செய்வான். அதுபோல நமக்கும் நம்மை கூர்மைப்படுத்த தக்க நேரம் கிடைத்திருக்கிறது எனக் கொள்வோம். மண்ணில் விழுந்த விதைகூட போராடியே முளைக்கிறது. காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது தமிழன் மட்டும் வீழ்ந்து கிடந்துவிடுவானா என்ன? மீண்டும் எழுவோம்.

No comments:

Post a Comment