Sunday, November 29, 2020

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு

மாவீரர்களை நினைவு கூர்வதற்கு அனுமதி கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாவீரர்களை நினைவுகூர்பவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ராணுவ தளபதி மிரட்டுகிறார். பதினொரு வருடங்களுக்கு முன்னர் மரணித்தவர்களைக் கண்டு இன்றும் இலங்கை அரசு ஏன் அஞ்சுகிறது? ஏனெனில் மரணித்த மாவீரர்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள். அதனால் மாவீரர்கள் மீண்டும் முளைத்துவிடுவார்கள் என்று பயம் கொள்கிறார்கள். அந்தப் பயம் இருக்கட்டும். குறிப்பு – வெற்றிவிழா கொண்டாடியவர்கள் பதினொரு வருடத்தின் பின்னரும் பயம் கொள்கிறார்கள் எனில் போராட்டம் தமிழர்களுக்கு தோல்வியைத் தரவில்லை என்றுதானே அர்த்தம்.

No comments:

Post a Comment