Sunday, November 29, 2020

எமக்காக மரணித்தவர்களை

•எமக்காக மரணித்தவர்களை நாம் நினைவு கூர வேண்டுமா? மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்? இல்லை அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்? முதலாவதாக, அவர்கள் எமக்காக மரணித்தவர்கள் இரண்டாவதாக, அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். மூன்றாவதாக அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும். முக்கியமாக எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும். ஏனெனில் எமது அடுத்த சந்ததியினரான இளம் சிறார்கள் தேடப்போவது தமது உறவுகளின் கல்லறைகளில் உள்ள பெயர்களை அல்ல. மாறாக தங்கள் உறவுகளின் வேர்களை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு வேண்டுமானால் மாவீரர்களின்; கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த இளம் சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது. இவர்கள் மிக விரைவில் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்கப் போகிறார்கள். Comments

No comments:

Post a Comment