Sunday, November 29, 2020

•எனக்கு நீதி வழங்குங்கள் இல்லையேல் தூக்கில் இடுங்கள்

•எனக்கு நீதி வழங்குங்கள் இல்லையேல் தூக்கில் இடுங்கள் ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதி கோரிக்கை கடந்த 12 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவதாசன் (வயது - 63) ஜனாதிபதி கோத்தா அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதில் எனக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள் இல்லையேல் மரணதண்டனை விதித்து தூக்கில் இடுங்கள் என்று கேட்டிருக்கிறார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என கூறுவார்கள். இங்கு அரசியல் கைதியான தேவதாசன் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நல்லாட்சியிலும் தேவதாசன் அவர்கள் இதுகுறித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தேவதாசனை சந்தித்து இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். ஆனாலும் தேவதாசன் அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை விடுதலை செய்த கோத்தபாயா தமிழ் அரசியல் கைதியான தேவதாசனின் வழக்கை விசாரணைக்குகூட எடுக்க தயாரில்லை. இத்தனைக்கு பிறகும் கோத்தபாயா தமிழர்களுக்கு தீர்வு தருவார் என கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment