Tuesday, May 25, 2021

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ் எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர ஓய்வு எட்டு மணி நேர உறக்கம் இதற்காகப் போராடி சிக்காக்கோ வீதிகளில் இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்" எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே எம் கரங்களில் தவளும் "செங்கொடி". வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழ்கிறான். மாற்றுவோம் இந்த அவல நிலையை. உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார். ஏன் இந்த நிலை? உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம். ஆறு மனி நேர வேலை கேட்போம் எட்டு மணி நேர உறக்கம் கேட்போம் பத்து மணி நேர ஓய்வு கேட்போம். போராடுவோம் எமக்காக மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்காகவும்! •முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம் •உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம். •நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம் வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!

No comments:

Post a Comment