Monday, May 25, 2020

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா?

•ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் மே மாதம் வந்துவிட்டால் சிலர் முகநூலில் வந்து விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதியவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திரா காந்தியும் அவரது இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி; பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில் உரையாற்றிய முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை காலில்போட்டு மிதிக்க வேண்டும். Image may contain: 1 person, close-up

•தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் !

•தனுவுடன் ஒரு (கற்பனை) உரையாடல் ! கேள்வி- உன்னை ஒரு பயங்கரவாதி என்று இந்திய அரசு கூறுகிறதே? தனு- ஏன் அப்படி சொல்கிறார்கள்? கேள்வி - குண்டு வெடிக்க வைத்தமையினால்? தனு- அப்படியென்றால் பகத்சிங் என்ன பூவையா வீசினார்? பாராளுமன்றத்திற்கு குண்டு விசிய பகத்சிங்கை ஆங்கிலேய அரசு பயங்கரவாதி என்று தூக்கில் இட்டுக் கொன்றது. ஆனால் இதே இந்திய அரசு அவரை சுதந்திர போராட்;ட தியாகி என்று பாராட்டுவதை கவனியுங்கள். கேள்வி- அப்படியென்றால் ? தனு- இந்திய அரசு என்னை பயங்கரவாதி என்று முத்திரை குத்தினாலும் எனது தமிழ் மக்கள் நான் ஒரு விடுதலைப் போராளி என்பதை நன்கு அறிவார்கள். கேள்வி - இருப்பினும் ராஜீவ் காந்தியை கொல்வது தவறு இல்லையா? தனு- இந்தியாவில் வேறு யாராவது தலைவர்களை நாம் கொன்றிருக்கிறோமா? இல்லையே. ராஜீவ் காந்தியை மட்டும் ஏன் கொல்ல வேண்டி வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்களேன். கேள்வி- இந்திய அமைதிப்படை ஈழத்தில் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கான தண்டனையா இது? தனு- இந்திய ராணுவம் மேற்கொண்ட அக்கிரமங்கள் மட்டுமன்றி அந்த அக்கிரமங்கள் குறித்து இந்திய நீதிமன்றம் ஒன்றில்கூட இதுவரை எமக்கு நியாயம் வழங்கப்படவில்லையே. கேள்வி- புரியவில்லை? தனு- ராஜீவ் காந்தி கொலை என்பது பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சார்பில் வழங்கப்பட்ட தண்டனை. கேள்வி- இருந்தாலும் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது என்ன நியாயம்? தனு- பஞ்சாபில் 400 இந்திய மக்களைக் கொன்ற டயர் என்னும் ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்து சென்று உத்தம்சிங் கொன்றார். அவரை தியாகி என்று இந்திய அரசு கௌரவித்துள்ளது. அவர் செய்தது நியாயம் என்று பாராட்டுபவர்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழரைக் கொன்றவரை இந்தியா சென்று நான் கொல்வது எப்படி அநியாயம் என்று கூறமுடியும்? கேள்வி- என்ன இருந்தாலும் பிரியங்கா, ராகுல் இருவரும் தம் இளம் வயதில் தந்தையை இழப்பது கொடுமை அல்லவா? தனு- பிரியங்கா போன்று 800 க்கு மேற்பட்ட எமது பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். ராகுல் போன்று பல்லாயிரம் குழந்தைகள் தமது தாய் தந்தையரை இழந்திருக்கிறார்கள். ராகுல் பிரியங்காவிற்காக கவலைப்படுபவர்கள் ஏன் எமது தமிழ் குழந்தைகளுக்காக கவலைப்படவில்லை? கேள்வி- பெண்கள் தற்கொலைத் தாக்குதல் செய்வது தவறு இல்லையா? தனு- குயிலி என்ற பெண் தற்கொலை தாக்குதல் செய்து வரலாற்றில் எமக்கு வழி காட்டியுள்ளார். குயிலி செய்தது தவறு என்று யாரும் எமக்கு சொல்லவில்லையே? கேள்வி- பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி பெண்களை மூளைச் சலவை செய்து போதை மருந்து செலுத்தி தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே? தனு- இந்திய ராணுவத்தின் பல அக்கிரமங்கள் என் கண் முன்னே நடந்திருக்கின்றன. இந்த பொறுப்பை நானே கேட்டுப் பெற்றேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது குறித்து உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கேள்வி- நிஜமாகவா? அச்சம் எதுவும் இல்லையா? தனு- கடந்த 3 நாட்களாக நான் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். எனது தோழி சுபா தான் செல்கின்றேன் எனக் கேட்டார். நான் விரும்பியிருந்தால் இந்த தாக்குதலில் இருந்து விலகியிருக்க முடியும். ஆனால் நான் வற்புறுத்தி இந்த வாய்ப்பைப் பெற்றேன். கேள்வி- என்னதான் துணிச்சல் பெற்ற ஆண்களாக இருந்தாலும் தூக்குமேடைக்கு செல்லும்போது அவர்கள் கால்கள் சோர்ந்துவிடும். அரைவாசி மயங்கிய நிலையிலேயே அவர்களை இழுத்துச் சென்று தூக்கில் இடுவார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் உன்னால் எப்படி கொஞ்சம்கூட மரணபயம் இன்றி முகத்தை இயல்பாக வைத்திருக்க முடிந்தது? தனு- இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட என் உறவுகளே என் மனக்கண்முன் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த நினைவே என்னை இயக்குகிறது. கேள்வி- இதனால் சாதிப்பது என்ன? தனு- இனி இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் ஈழத்தில் தலையிடமுன் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்திப்பார்கள். ஒரு இனத்தை அதன் சொந்த மண்ணில் தாக்கினால் அது எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் திருப்பி அடி கிடைக்கும் என்று வரலாறு இனி இயம்பும். குறிப்பு - இது ஒரு மீள்பதிவு Image may contain: 1 person

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா?

•தனு வின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுமா? 1991ம் ஆண்டு எப்ரல் மாதம், மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை திடீரென 60 வயதான குருசாமி என்பவரை கொண்டு வந்து எனது அருகில் அடைத்தார்கள் கொலைக் குற்றம் ஒன்றிற்காக 14 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்த குருசாமியின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டமையினால் தூக்கில் இடுவதற்காகவே அவரை என் அருகில் உள்ள செல்லில் அடைத்தார்கள். இறுதியாக அவரது குடும்பத்தவர்கள் வந்து பேசினார்கள். தனக்கு வயதாகிவிட்டது என்றும் தான் எல்லாம் அனுபவித்துவிட்டேன். எனவே சாவது பற்றி கவலைப்படவில்லை என சிரித்தக்கொண்டே பிள்ளைகளிடம் அவர் கூறினார். அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் அதிகாரிகள் வந்து குருசாமியை எழுப்பினார்கள். அவரை குளிக்கவாத்து சுடு சோறு சாப்பிட கொடுத்தார்கள். அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் பீடீ கேட்டு வாங்கி பற்றியதைக் கண்டேன். இறுதியாக அதிகாரிகள் “வா குருசாமி போகலாம்” என்று அழைத்தது கேட்டது. ஆனால் அதன் பின்னர் இரு காவலர்கள் அவரை தொர தொரவென்று இழுத்து செல்வதே எனக்கு தெரிந்தது. முதல் நாள் சாவது பற்றி தனக்கு கவலை இல்லை என்று கூறியவர் அடுத்த நாள் தானாகவே நடந்து செல்வார் என நினைத்திருந்த எனக்கு அவர் இழுத்து செல்லப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவரை இழுத்துச் சென்ற காவலரிடம் அடுத்த நாள் கேட்டேன். அதற்கு அவர் “என்னதான் உறுதியாக இருந்தாலும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் கால்கள் சோர்ந்துவிடும். பாதி மயக்க நிலையிலேயே இழுத்து சென்று தூக்கில் இடுவது வழக்கம்” என்றார். 1991ம் அதே ஆண்டு. ஆனால் மே மாதம் 21ம் திகதி. மதுரை சிறையில் நள்ளிரவு. திடீரென்று எனது செல் முன்பு காவல் பலப்படுத்தப்பட்டது. என்ன காரணம் என்று கேட்டபோது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சேதி சொல்லப்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி கொலை பற்றிய விபரங்கள் வெளிவந்தபோது தனு வின் உணர்வுகள் குறித்து சிந்தித்து பார்த்தேன். இன்னும் சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கப்போகிறது. குண்டு வெடித்தால் தனது இலக்கு மட்டுமல்ல தானும் மரணமடையப்போவது அந்த பெண்ணிற்கு தெரியும். ஆம். தான் இறக்கப்போவது அந்த பெண் தனு விற்கு நன்கு தெரியும். அவரது அந்த இறுதி நிமிடங்களில் நிச்சயம் தன் தாய் தந்தையர் முகம் வந்திருக்கும் தன் கூடப்பிறந்த சகோதர்கள் நினைவுகள் வந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த பட படப்பும் இல்லை. எந்த மரண பயமும் இல்லை. கொஞ்சம் காட்டியிருந்தால்கூட அவரது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்திருக்கவேண்டும். வயதான, எல்லாம் அனுபவித்த குருசாமிகூட மரண தருவாயில் கால்கள் சோர்ந்து பாதி மயக்க நிலைக்கு சென்றார். ஆனால் இந்த இளம் வயதில் எதையும் அனுபவிக்காத தனு உறுதியாக நின்றமைக்கு என்ன காரணம்? தனு விரும்பியிருந்தால் பின்வாங்கியிருக்கலாம். மனம் மாறியிருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் தனு தானாகவே கேட்டு இதனை மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அப்படியென்றால் தனு வின் இந்த உணர்வுகளுக்கு என்ன காரணம்? ராஜிவின் கொலை பற்றி பேசுபவர்கள் எத்தனை பேர் இந்த தணுவின் உணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர்? அவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தால் அமைதிப்படை என்று வந்து இந்திய ராணவம் செய்த கொலைகள , பாலியல் வல்லுறவுகள், சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட விபரங்கள் தெரிந்திருக்கும். ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தனு என்ற இளம் பெண் கொடுத்த தண்டனை இது என்று புரிந்திருக்கும். அதனால்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் தளபதி தோழர் லெனின் “தனுவிற்கு வீர வணக்கம்” செலுத்தவதாகவும் ராஜீவ் நினைவு மண்டபம் அகற்றப்பட்டு அங்கு தனுவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். Image may contain: 4 people, people standing

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும் !!

போங்கடா நீங்களும் உங்கட நியாயமும் !! இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்று கூறுபவர்கள், ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்று கூறுபவர்கள், மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் RSS பார்ப்பணர்கள் என்று கூறுவதில்லை. மாறாக, காந்தியைக் கொன்றது கோட்சே என்றே கூறுகிறார்கள். சரி. காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றது தானு என்றல்லவா கூற வேண்டும்? காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இந்திரா காந்தியைக் கொன்றது பியாந்த் சிங் என்றல்லவா கூற வேண்டும். ஏன் அவ்வாறு இவர்கள் கூறுவதில்லை? ஏனென்றால் “தமிழன் இளிச்சவாயன், என்ன சொன்னாலும் ஏத்துக்குவான்” என்று இவர்கள் திமிராக நினைக்கிறார்கள். அதனால்தான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி ஈழத் தமிழர்களிடம் இன்னும் மன்னிப்பு கோராமல் இருக்கிறார். அது மட்டுமல்ல சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்திய தாக்கியபோது அதனை சிங்களவர்கள் தாக்கியதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. மாறாக இந்த சிப்பாய்க்கு வெயிலில் நின்றதால் சிறிது மனக் குழப்பம் என்றார்கள். இந்த சிப்பாய் தண்டனை கூட அனுபவிக்காமல் இலங்கை அரசு விடுதலை செய்தபோதும் இந்திய அரசு அது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால் 7 தமிழர்களை 27 வருடம் கழிந்த பின்னரும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும்போதாதென்று 2009ல் இலங்கை அரசுடன் சேர்ந்து 40ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தார்கள். குறிப்பு -"நம்மாளுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா வீட்ல இருக்கற பொருள வெளிய எடுத்து வீசுவான் , பார்ப்பானுக்கு பைத்தியம் புடிச்சுதுன்னா வெளிய இருக்கற பொருள எடுத்து வீட்டுக்குள்ள வீசுவான்." பார்ப்பனர்கள் அவ்வளவு சூழ்ச்சிக்காரர்கள் - பெரியார் Image may contain: 1 person, close-up

•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை

•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை இலங்கை மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை எமது ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை எமது ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த எமது ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் எமது ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் எமது ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ்க் அவசியம். ஆனால் தனக்கு மாஸ்க் அவசியம் இல்லை என்பதையும்கூட எமது ஜனாதிபதி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது கூறுங்கள். இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை வேறு எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா? சுமந்திரன் பாணியில் சொல்வதானால் இப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா? குறிப்பு - மொழிபெயர்ப்பு செய்பவர்கள் “பாக்கியம்” என்பதை “அதிர்ஸ்டம்” என்று செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். Image may contain: 3 people, people standing

சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா?

•சுவாசிக்க நல்ல காற்று கேட்டது குற்றமா? இந்த மக்கள் என்ன கேட்டார்கள்? தமக்கு சுவாசிக்க நல்ல காற்று வேண்டுமென்றுதானே கேட்டார்கள். அதையும் நீங்கள் சொல்லும் அகிம்சை வழியில்தானே கேட்டார்கள். அதற்காக கொஞ்சம்கூட இரக்கமின்றி சுட்டுக் கொல்ல வேண்டுமா? சுட்டுக்கொல்லப்பட்ட விபரத்தை டிவியில் பார்த்துதான் தனக்கு தெரியும் என்கிறார் முதலமைச்சர். அப்படியென்றால் பொலிசாருக்கு சுடுவதற்கான அனுமதியையோ அல்லது அதிகாரத்தையோ வழங்கியவர் யார்? ஏன் இன்னும் இந்த பலியான மக்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை? சுட்ட பொலிஸ் நாய் எப்படி சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறது? எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே விமர்சனம் என்றார் மாவோ சேதுங் ஆனால் தங்களை மாவோயிஸ்டுகள் என்று கூறிக்கொள்பவர்கள் எதிரிக்கு ஆயுதம் மூலம் பதில் அளிப்பதற்கு மாறாக அஞ்சலிப் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தமிழரசனோ அல்லது லெனினோ உயிரோடு இருந்திருந்தால் எதிரிகளின் மொழியில் தக்க பதிலை கொடுத்திருப்பார்கள். Image may contain: 12 people, including தோழர் வேடியப்பன், text

பாவம் இவர்கள்

பாவம் இவர்கள் இந்தியா விற்கப்பட்டுவிட்டது என்று தெரியாமல் தாம் இந்தியர் என்ற பெருமையுடன் நடக்கிறார்கள். இவர்கள் இந்தி மொழி பேசுபவர்கள் இவர்கள் இந்தி மொழி கற்றவர்கள். ஆனாலும் மாநிலம் மாநிலமாக பிழைப்பிற்காக நடந்து திரிகிறார்கள். தமிழர்கள் இந்தி மொழி கற்றால் நன்றாக வாழலாம் என்று கூறிய மாமா பயல் துக்ளக் குருமூர்த்தியும் எஸ்வி சேகரும் உயிரோடு இருக்கிறாங்களா அல்லது செத்திட்டாங்களா? Image may contain: one or more people, people standing, people walking and outdoor