Tuesday, February 26, 2013

ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அவர்களே!

ஜனாதிபதி பிராணாப் முகர்ஜி அவர்களே!

வீரப்பனை தேடச் சென்று வாசாத்தியில் பெண்களை கற்பழித்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

சிதம்பரத்தில் காவல் நிலையத்தில் பத்மினியை கற்பழித்து கொலை செய்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

திண்டிவனத்தில் இருளர் இனப் பெண்ணை கற்பழித்த பொலிசாருக்கு என்ன தண்டனை வழங்கியுள்ளீர்கள்?

130 நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்துள்ளன. ஆனால் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொலை வெறி?

அமைச்சர் முதல் ராணுவ தளபதிவரை கோடிக்கணக்காக ஊழல் செய்து விட்டு சுதந்திரமாக திரிகின்றனர். அவர்களை தண்டிக்க வக்கற்ற நீங்கள் அப்பாவிகளை கொல்ல துடிப்பதேன்?

4 comments:

  1. வீரப்பன் அரசியல்வாதிகளுக்காக சந்தனக்கட்டை கடத்திய போது தண்டிக்கப்படவில்லை. வீரப்பன் அரசியல்வாதிகளுக்காக யானைத் தந்தம் கடத்திய போது தண்டிக்கப்படவில்லை. ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலை பற்றி பேசியவுடன் தண்டிக்கப்பட்டான். இப்போது புரிகிறதா சட்டம் எப்போது யாரை தண்டிக்கும் என்று?

    ReplyDelete
  2. வீரப்பன்களை உருவாக்கிய அரசியல்வாதிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் அப்பாவிகளுக்கு மரணதன்டனை. இது என்ன நியாயம்?

    ReplyDelete
  3. தடா சட்டம் தவறானது என்று நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது எந்த ஊர் நியாயம்?

    ReplyDelete
  4. கொலை வெறி கொண்ட குடியரசுத் தலைவருக்கு பேஸ்புக் வட்டத்தில் “தூக்கு தூக்கி” என்னும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete