Monday, June 29, 2020
தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை
தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை
தமிழ் இனவாதிகளாக சித்தரிக்கும் சாபக்கேடு
தமிழ் தேசிய இனத்தில் மட்டுமே உண்டு.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை
நிறப் படுகொலை என கண்டிக்கும் தமிழ் கம்யுனிஸ்டுகள்
முள்ளிவாய்க்காலில் தமிழர் கொல்லப்பட்டதை
இனப்படுகொலை என கண்டிக்க மறுப்பது ஏன்?
“தேசியம் ஒரு கற்பிதம்” என்று புத்தகம் எழுதியவரே
கீழடி ஆய்வை சுமந்து தமிழ் தேசியம் பேசுகிறார்.
அது தெரியாமல் புலத்தில் இருக்கும் புரட்டுவாதிகள்
தமிழ் தேசியம் பேசுவோரை தமிழ் இனவாதிகள் என்கின்றனர்.
லெனின் இப்போது தமிழனாக பிறந்து வந்தால்
அவரையும் இனவாதி என கூற இவர்கள் தயங்கமாட்டார்கள்.
Image may contain: text that says "தனது தேசிய் இனத்திற்கு போராடாத எவரும்... போராடுலதாக சொல்வது ஏமாற்று வேலையே... -தோழர் லெனின்"
கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார்.
கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார்.
இந்த வருடம் சர்வதேச ஆதரவுடன் புதிய அரசுடன் பேசி தீர்வு என்கிறார்.
இனி அடுத்த வருடம் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் புதிதாக ஏதாவது கூறுவார்.
கடந்த பத்து வருடமாக 15 எம்.பி களை வைத்து எந்த தீர்வும் பெறவில்லை.
இப்போது 20 எம்.பி களைத் தரும்படி கேட்கிறார். அதை வைத்து என்ன தீர்வை எப்படி பெறப் போகிறார் என்பதையும் கூறவில்லை.
தனக்கு சொகுசு பங்களாவும் சிஙகள பொலிஸ் பாதுகாப்பும் பெற்றதைத் தவிர தமிழ் மக்களுக்கு என்ன பெற்றிருக்கிறார்?
இனியும் இவர் ஏமாற்றுகளை தமிழ் மக்கள் நம்புவார்கள் என்று எப்படி இவர் நினைக்கிறார்.
இவர் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கவில்லை. மாறாக மூளையே இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்.
தமக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ் மக்கள் இம்முறை இவருக்கு நிச்சயம் காட்டுவார்கள்.
குறிப்பு - கடந்த தேர்தலின்போது ஒரு வருடத்தில் தீர்வு என்றார். அப்புறம் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்.. அந்த தீர்வுகள் எல்லாம் எங்கே என்று ஐயா கூறுவாரா?
Image may contain: 1 person
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் மண்ணை அள்ளி தூற்றி திட்டியபோது அப் பெண்ணை கஜேந்திரகுமார் பிரியாணி வாங்கிக் கொடுத்து அனுப்பிய பெண் என்றீர்கள்.
அதன்பின்பு ஒரு பெண் வவுனியாவில் செருப்பு காட்டிய போது அவரை கோத்தபாயாவின் ஆள் என்றீர்கள்.
இப்போது ஒரு பெண் 20 கோடி ரூபா எங்கே என்று கணக்கு கேட்டதும் அவரை கட்சியை உடைக்க மகிந்தாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்கிறீர்கள்.
ஏன்டா சொல்வதுதான் சொல்லுறியள் அவர் சீனாவினால் அனுப்பப்பட்ட ஆள் என்று சொல்லுங்களேன்டா. அது உங்களுக்கும் கொஞ்சம் கெத்தாக இருக்குமேடா.
வாங்கப்போற ஜந்தோ பத்தோ வோட்:டுக்கு என்டா இப்படி கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்?
இனியாவது சோத்தில கொஞ்சம் உப்பு போட்டுச் சாப்பிடுங்கடா.
குறிப்பு - கணக்கு கேட்டவுடன் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளரை மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுவது உரிய பதில் இல்லை. 20 கோடி ரூபா எங்கே? சுமந்திரன் உரிய பதில் கூறியேயாக வேண்டும்.
Image may contain: 1 person, text
Image may contain: Athavan Ananth, standing and outdoor
•தவளையும் தன் வாயால் கெடும்!
•தவளையும் தன் வாயால் கெடும்!
தவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல சிறீ வாத்தியும் தன் வாயால் கெடுகிறார்.
முதலில் சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக கருத வேண்டும் என்றார்.
இப்போது, தானே 75 கள்ள வோட்டு போட்டேன் என்று எவ்வித கூச்சமும் இன்றி கூறுகிறார்
சிறீதரன் வாத்தியாக இருந்தவர். ஒரு வாத்தியே இப்படி என்றால், இனி யாரிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியும்.
என்றைக்கு சுமந்திரனுடன் சேர்ந்தாரோ அன்றில் இருந்து இவரும் உளற ஆரம்பித்துவிட்டார்.
இதைத்தான் ஊரில் சொல்வார்கள் “ சேர்க்கை சரியில்லை” என்று
குறிப்பு - இந்த முறை எத்தனை கள்ள வோட்டு போடப் போகிறார்கள்?
Image may contain: one or more people, people standing, shorts and outdoor
யோக்கியன் வாறார்.
•யோக்கியன் வாறார்.
செம்பை எடுத்து உள்ளே வையுங்கோ!
தன்னிடம் 20 கோடி ரூபா பணம் தரப்படவில்லை என சுமந்திரன் மறுத்திருக்கிறார்.
இவ்வாறு மறுப்பு தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கணக்கு கேட்டவுடன் கேட்டவரை மகிந்தவின் ஊடுருவல் என்று கூறுவது உரிய பதில் இல்லை.
அதுமட்டுமல்ல சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அது வரவேற்கப்பட வேண்டியது.
ஏனெனில் அப்பதான் அந்த பணம் எங்கே என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும்.
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த பெண் கணக்கு கேட்பதாக கூறுகிறார்.
ஆனால் இதற்கு முன்னரே மாவை சேனாதிராசாவின் மகன் கணக்கு கேட்டிருக்கிறார்.
அதற்கும் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கணக்கு கேட்டிருக்கிறார்.
கட்சிக்குள் கணக்கு கேட்டிருக்க வேண்டும் என்று இப்போது சுமந்திரன் கூறுகிறார். ஆனால் கட்சிக்குள் கணக்கு கேட்டபோதெல்லாம் சுமந்திரன் கணக்கு காட்டவில்லையே.
எல்லாவற்றையும்விட புலம்பெயர்ந்தோர் அனுப்பும் நிதியில் 15 வீதம் கமிஷன் சிறீதரன் பெறுகிறார். கேட்டால் அது கட்சிக்கு என்கிறார். இது பற்றி சுமந்திரன் வாய் திறப்பாரா?
சுமந்திரன் யோக்கியன் என்றால் தேர்தலுக்கு வரும் நிதி எவ்வளவு, குறிப்பாக இந்திய தூதர் தரும் நிதி எத்தனை கோடி என்ற கணக்கை மக்கள் முன் கூறட்டும் பார்க்கலாம்.
Image may contain: 2 people, including Anthonippillai Reginoldraj, people standing
•சுமந்திரன் சுத்துமாத்து!
•சுமந்திரன் சுத்துமாத்து!
சுத்துமாத்து – 1
தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே இந்த கணக்கு பிரச்சனை எழுப்பப்படுகிறது என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
சுமந்திரன் கூறுவது பொய். ஏனெனில் இது நான்கு மாதங்களுக்கு முன்னர் சுமந்திரனிடமே கேட்கப்பட்டிருக்கிறது.
சுத்துமாத்து – 2
கணக்கு கேட்பவர் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறுகிறார்.
இது உரிய பதில் இல்லை. மேலும் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் இது பற்றி கேட்டிருக்கிறார். எனவே அவரையும் மகிந்தவின் ஊடுருவல் என்று சுமந்திரன் கூறப் போகிறாரா?
சுத்துமாத்து – 3
கட்சிக்குள் கேட்காமல் கட்சிக்கு வெளியே கணக்கு கேட்பது தவறு. இது கட்சியை உடைப்பதற்கான சதியாகவே கருதப்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார்.
இதுவும் பொய். ஏனெனில் நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்சிக்குள்தான் சுமந்திரனிடம் கேட்கப்பட்டது. அப்போது சுமந்திரன் உரிய பதில் அளிக்காததால்தான் இப்போது வெளியில் வந்து கேட்கின்றனர்.
சுத்துமாத்து – 4
தன்னிடம் பணம் எதுவும் தரப்படவில்லை என்று கூமந்திரன் கூறுகிறார்.
இதுவும் பொய். ஏனெனில் இந்த பிரச்சனை கட்சிக்குள் வந்தபோது சுமந்திரன் தானே அப் பணத்தை பெற்றதாகவும் அது மாகாணசபை தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
சுமந்திரன் மாறி மாறி பொய் கூறுகிறார். ஆனால் இனிவரும் நாட்களில் இன்னும் பல ஆதாரங்கள் வெளிவர இருக்கின்றன.
குறிப்பு - இதுபற்றிய பத்திரிகை ஆதாரம் கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.
Image may contain: 1 person
Tuesday, June 2, 2020
Subscribe to:
Posts (Atom)