Monday, June 29, 2020

கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார்.

கடந்த வருடம் இந்திய ஆதரவுடன் தீர்வு பெறப்படும் என்றார். இந்த வருடம் சர்வதேச ஆதரவுடன் புதிய அரசுடன் பேசி தீர்வு என்கிறார். இனி அடுத்த வருடம் என்ன கூறுவார் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் புதிதாக ஏதாவது கூறுவார். கடந்த பத்து வருடமாக 15 எம்.பி களை வைத்து எந்த தீர்வும் பெறவில்லை. இப்போது 20 எம்.பி களைத் தரும்படி கேட்கிறார். அதை வைத்து என்ன தீர்வை எப்படி பெறப் போகிறார் என்பதையும் கூறவில்லை. தனக்கு சொகுசு பங்களாவும் சிஙகள பொலிஸ் பாதுகாப்பும் பெற்றதைத் தவிர தமிழ் மக்களுக்கு என்ன பெற்றிருக்கிறார்? இனியும் இவர் ஏமாற்றுகளை தமிழ் மக்கள் நம்புவார்கள் என்று எப்படி இவர் நினைக்கிறார். இவர் தமிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கவில்லை. மாறாக மூளையே இல்லாதவர்கள் என்று நினைக்கிறார். தமக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ் மக்கள் இம்முறை இவருக்கு நிச்சயம் காட்டுவார்கள். குறிப்பு - கடந்த தேர்தலின்போது ஒரு வருடத்தில் தீர்வு என்றார். அப்புறம் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்றார்.. அந்த தீர்வுகள் எல்லாம் எங்கே என்று ஐயா கூறுவாரா? Image may contain: 1 person

No comments:

Post a Comment