Monday, June 29, 2020

•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன?

•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன? சுமந்திரன் நல்லவர், வல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் அவரது தம்பிகள் கூறுகின்றனர். குறிப்பாக பண விடயங்களின் அவர் கரங்கள் கறைபடியாதவை என்று வேற பில்டப் கொடுக்கின்றனர். சரி. அப்படியென்றால் “தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு வந்த பணம் எங்கே? அதன் கணக்கு வழக்கு என்ன?” என்று மாவை சேனாதிராசாவின் மகன் கேட்டதற்கு ஏன் இன்னும் சுமந்திரன் பதில் அளிக்கவில்லை? மாவை சேனாதிராசாவின் மகன் இவ்வாறு பகிரங்கமாக கேட்டதால்தான் இம்முறை மாவைக்கு எதிராக சுமந்திரன் செயற்படுகின்றார் என்று கூறுகிறார்களே. அது உண்மையா? மாவை சோனாதிராசாவின் மகன் கேட்டதைக் கூட விட்டுவிடுவோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டாரே? அவருக்குகூட ஏன் சுமந்திரனால் பதில் அளிக்க முடியவில்லை? ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இந்திய தூதர் தரும் பணம் எத்தனை கோடிகள்? அது எப்படி வேட்பாளர்களுக்கு பங்கிடப்படுகிறது? அதன் கணக்கு வழக்குகளை மக்களுக்கு காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்காவது காட்டலாம்தானே? அதுவும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றும் நேர்மையானவர் என்றும் அவரது தம்பிகளால் அழைக்கப்படும் சுமந்திரனால் ஏன் நேர்மையாக கணக்கு வழக்குகளைக் காட்ட முடியவில்லை@? சுமந்திரன் ஒரு பிரபலமான வழக்கறிஞர். அவர் தனது லட்சக்கணக்கான ரூபா வருமானத்தை விட்டிட்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக தம்பிகள் கூறுகின்றார்கள். சுமந்திரனின் வழக்கு நிறுவனம் இப்போதும் இயங்குகிறது. அதனூடாக அவரது வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதைவிட கிருத்தவ நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமந்திரன் மனைவிக்கு மாதம் 3 லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். அதை சுமந்திரன் இதுவரை மறுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இரகசிய மற்றும் பினாமி சொத்துகளை தவிர்த்து அவர் காட்டிய சொத்து பெறுமதியின்படி அவரது சொத்து மதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கு பிறகும் சுமந்திரனை நேர்மையானவர் என்று எப்படி அவரது தம்பிகளால் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூற முடிகிறது? குறிப்பு - சம்பந்தர் ஐயாவின் மகன் கொழும்பில் செய்யும் பிசனஸ் என்ன? அதற்குரிய முதலீடு எத்தனை கோடிகள்? அது எவ்வாறு பெறப்பட்டது என்பதையாவது சுமந்திரன் கூறுவாரா? Image may contain: 4 people, including Anthonippillai Reginoldraj, suit

No comments:

Post a Comment